10.08.2011-லண்டன் கலவரத்தில் இலங்கையர் பாதிக்கப்படுகிறார்களா - அவதானிக்கிறாராம் கோத்தபாய-ஆனை இளைச்ச எலிஏதோ செய்யுமாம். கண்மண் தெரியாமல் பேசுகிறார். இதுபோலவே அவரின் எல்லாச் செயலும் இருக்கும்.
கடந்த வியாழக்கிழமை ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை பிரித்தானியப் கா.து சுட்டதையடுத்து அங்கு மூண்ட கலவரம் இன்றுவரை தொடர்ந்தவண்ணம் உள்ளது.லண்டனில் உள்ள இலங்கையர்கள் இக்கலவரங்களில் பாதிப்புக்கு உள்ளாகின்றார்களா என்பது தொடர்பில் மிகவும் அவதானமாக கண்காணித்து வருவதாக லண்டனில் உள்ள இலங்கைக்கான பதில் து.அதிகாரி தெரிவித்துள்ளார் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.
லண்டன் கலவரங்கள் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அங்கு வசிக்கும் மக்களையும் அவர்களுடைய சொத்துக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரிட்டிஷ் அரசாங்கம் எடுக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராயபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.