09 .08. 2011பலசுதீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் - யீ.எல்.பீரிசு-முசுலீம் உலகை ஏமாற்றி முழுஉலகையும் ஏமாற்றும் தந்திரம்.அய்.நா.மனித உரிமைப் பேரவையில் தனி நாடாக அங்கீகரிக்குமாறு பலஸ்தீனம், ஐக்கிய நாடுகள் அமைப்பில் கோரிக்கை விடுக்கவுள்ளது.
பலசுதீனம் ஓர் தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் யீ.எல்.பீரிசு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்புரிமை பெற்றுக் கொள்வதற்கு பலஸ்தீனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் தனி நாடாக அங்கீகரிக்குமாறு பலசுதீனம், ஐக்கிய நாடுகள் அமைப்பில் கோரிக்கை விடுக்கவுள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பலசுதீன தூதுவர் அன்வர் அல் அஃகாவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யெருசலத்தை தலைநகராகக் கொண்டு பலசுதீன இராச்சியம் உருவாக்கப்படுவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இசுரேலுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அஃகா, அமைச்சர் பீரிசிற்கு விளக்கம் அளித்துள்ளார்.