குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

பலசுதீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் - யீ.எல்.பீரிசு-முசுலீம் உலகைஏமாற்றி முழுஉலகையும்ஏமாற்ற

09 .08. 2011பலசுதீனம்  தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் - யீ.எல்.பீரிசு-முசுலீம் உலகை ஏமாற்றி முழுஉலகையும் ஏமாற்றும் தந்திரம்.அய்.நா.மனித உரிமைப் பேரவையில் தனி நாடாக அங்கீகரிக்குமாறு பலஸ்தீனம், ஐக்கிய நாடுகள் அமைப்பில் கோரிக்கை விடுக்கவுள்ளது. பலசுதீனம் ஓர் தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் யீ.எல்.பீரிசு தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்புரிமை பெற்றுக் கொள்வதற்கு பலஸ்தீனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் தனி நாடாக அங்கீகரிக்குமாறு பலசுதீனம், ஐக்கிய நாடுகள் அமைப்பில் கோரிக்கை விடுக்கவுள்ளது.
 
இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பலசுதீன தூதுவர் அன்வர் அல் அஃகாவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
யெருசலத்தை தலைநகராகக் கொண்டு பலசுதீன இராச்சியம் உருவாக்கப்படுவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இசுரேலுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அஃகா, அமைச்சர் பீரிசிற்கு விளக்கம் அளித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.