குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

அமெரிக்க 10 போர் விமானங்கள் அத்துமீறிப்பறந்தன!1987 இந்தியமிறாச்2011இல்அமெரிக்கா!

  07.08.2011-த.ஆ.2042- அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன. இது குறித்து விசனம் அடைந்துள்ள இலங்கை தனது கண்டனத்தையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. இது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம், இலங்கையின் உயர்ந்த மலைப்பகுதியான பீதுருதாலகலவில் உள்ள ரடார் கருவியினால் அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் எப்பொழுது இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது தெரியவரவில்லை.

இதனையடுத்து இலங்கை அரசாங்கம், அமெரிக்காவிடம் தமது உத்தியோகபூர்வ ஆட்சேபனையை தெரிவிக்கவுள்ளது.

சர்வதேச வான்பரப்பு சட்டத்தின்படி ஒரு நாட்டின் வான்பரப்பில் பிரவேசிக்கும் முன்னர், அந்த நாட்டின் அனுமதி பெறப்படவேண்டும். எனினும் அதனை குறித்த அமெரிக்க ஜெட் விமானங்கள் மேற்கொள்ளவில்லை.

இந்த விமானங்கள் அமெரிக்காவின் ஏழாவது படைப்பிரிவின் விமானங்கள் என்று நம்பப்படுகின்றன.

இந்தநிலையில் என்ன காரணங்களுக்காக குறித்த விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் பிரவேசித்தன என்பதை ஆராய்வதாக இலங்கை உள்ளுர் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஊடுருவல் இடம்பெற்ற போது தமது அதிகாரிகள் விமானங்களை இலங்கையின் வான்பரப்பில் இருந்து அகன்று செல்லுமாறு உத்தரவிட்டதாகவும் இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த ஊடுருவல், இலங்கையின் வான்பரப்பின் 200 மைல்கள் மற்றும் 380 வான்பரப்பு கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்றுளளது. எனினும் இந்த சம்பவம் குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க அதிகாரிகள் கருத்து எதனையும் வெளியிடவில்லை.

இரண்டாம் இணைப்பு

தென்கிழக்காசியக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலில் இருந்து கிளம்பிய போர் விமானங்களே இலங்கையின் வான்பரப்புக்குள் அனுமதி ஏதுமின்றித் திடீரெனப் புகுந்து வெளியேறின என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்க விமானங்கள் 10 இலங்கை வான் பரப்பைக் கடந்து சென்றமையை பேதுருதாலகாலவில் உள்ள விமானப் பறப்புக் கட்டுப்பாட்டுத் தலைமையகம் உறுதிப்படுத்தியது. இலங்கை விமானப் படையினரும் இதனை உறுதி செய்துள்ளனர்.

அனுமதி இன்றிச் சில விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்பில் பறந்தன என்பதை பொதுமக்கள் வானூர்தி கட்டுப்பாட்டுச் சபையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

அமெரிக்கப் படையினரின் வழக்கமான பயிற்சி நடவடிக்கை ஒன்றின்போதே விமானங்கள் இலங்கை வான்பரப்பைத் தாண்டிச் சென்றதாக அமெரிக்கப் படைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறின.

ஆனால், இது பற்றி கருத்துத் தெரிவிக்க கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்துப் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று இலங்கையை அமெரிக்கா வற்புறுத்திவரும் நிலையில், அதன் போர் விமானங்கள் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.