07.08.2011 -அய்க்கிய இலங்கைக்குள் தீர்வு என்று கூறியபின் என்ன பிரிவினை பிரிவினை என்பதைவைத்தே சிங்களம் அரசியல் நடத்துகின்றது.தமிழ் மக்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராயபச சாடியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாள் காலக்கெடு தொடர்பில் பதிலளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று முக்கிய நிபந்தனைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பத்து நாட்களுக்குள் வெளியிட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போர்க்காலத்தில் உதவிநிறுவனங்களையே விடவில்லை த.தே.கூ. விட்டிருப்பார்களா? இடம்பெற்ற காலத்தில் அப்பாவி தமிழ் மக்களுக்காக எதனையும் செய்யாத கட்சி தற்போது, தமிழ் மக்களை பயன்படுத்தி அரசியல் செய்ய முனைப்பு காட்டுவதாக பெசில் ராயபட்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
போரின் பின்னரான இலங்கையின் உறுதித்தன்மையை குழப்பும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் செயற்பட்டு வருகின்ற போதிலும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பிரிவினைவாத கொள்கைகளை முன்னெடுப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.