3,143 பயங்கரவாதிகள் கைது
இஸ்லாமாபாத், ஆக.5- பாகிஸ்தான் நாடாளுமன்றத் தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் இது குறித்து குறிப்பிடுகை யில், பலுசிஸ்தான், கைபர் பக் துன்கவா, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த மூன் றாண்டுகளில் 3,143 பயங்கர வாதிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில், கைபர் பகுதியில் மட்டும் 2,103 பேர் கைதாகியுள்ளனர்
இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல்கள் திருட்டு சீனா மீது கணினி நிறுவனம் குற்றச்சாற்று Digg Twitter RSS இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல்கள் திருட்டு சீனா மீது கணினி நிறுவனம் குற்றச்சாற்று எழுத்துரு அளவு
இந்தியா, அமெரிக் கா உள்ளிட்ட உலக நாடுகளின் அரசு கள், அய்.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் என, மொத்தம் 72 அமைப் புகளின் இணையதளங்களுக்குள் புகுந்து, ரகசிய தகவல்களைத் திருடிய சம்பவங்களின் பின்னணியில் சீனா உள்ளதாக, கணினி பாதுகாப்பு நிறு வனம் ஒன்று பகிரங்கமாகத் தெரிவித் துள்ளது.
இது மிகப் பெரிய அறிவுத் திருட்டு' என, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய, அமெரிக்க ராணுவம் மற்றும் உள்துறை தொடர்பான இணையதளங்களில், இணையத் திருடர்கள் புகுந்து சர்வ சாதாரணமாக ரகசிய தகவல்களைத் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதில், அமெரிக்காவின் வெளியுறவு, சி.பி.அய்., மற்றும் பென்டகன் ஆகியவற்றின் இணைய தளங்களில் அடிக்கடி திருடப்பட்டன. இவை தவிர சில வங்கிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் இணையதளங்களில் இருந்தும் ரகசிய தகவல்கள் திருடப்பட்டன.
இதுகுறித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா, இதன் பின் புலத்தில் ஒரு நாடு இருப்பதாக மட்டும் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந் தது.
இந்நிலையில், அமெரிக்காவில் இயங்கி வரும் பிரபல கணினி பாதுகாப்பு நிறுவனமான மெக் அபீ', இணைய தளத் திருட்டு கள் குறித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 2006 முதல் இதுபோன்ற இணையதளத் திருட்டுகளில் ஈடுபட்டுள்ள நாடு, சீனா வாக இருக்கலாம் என, சுட்டிக் காட் டப்பட்டுள்ளது.
மெக் அபீ' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த இணையதளத் திருட்டுகள் 2006ன் நடுவில் துவங்கு கின்றன. கிடைத்துள்ள ஆதாரங் களின்படி பார்த்தால், அதற்கும் முன்பே அது துவக்கப் பட்டிருக்க வேண்டும். ஒரு சில திருட்டுகள் 28 மாதங்களுக்கு முன்னும், சில திருட்டுகள் ஒரு மாதத் திற்கு முன்பும் கூட நடந்திருக்கின்றன.
சில வைரஸ்' உள்ள மெயில்கள் இந்த இணையதளங்களுக்கு வரும். தெரி யாமல் அவற்றை திறந்து விட்டால் போதும், அதில் இருந்து வைரஸ் கணி னிக்குள் புகுந்து, மறுபக்கம் உள்ள வர்கள், தகவல்களைத் திருட வழி வகுத்துக் கொடுத்து விடும்.
மெக் அபீ' யின் துணைத் தலைவர் டிமிட்ரி அல்பெரோவிட்ச் கூறுகையில்,"இந்தத் திருட்டுகள் மூலம் ராணுவம், தொழில்துறை, தனியார் நிறுவனங்களின் பணப் பரிமாற்றங்கள், உயர் அதிகாரிகளுக்கு இடையிலான ரகசிய பேச்சு வார்த்தைகள் போன்ற தகவல்கள் திருடு போயுள்ளன. உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறைதான் மிகப் பெரிய அறிவுத் திருட்டு நடந்துள்ளது' என்றார்.
இணையதளத் திருட்டுகள் குறித்து ஆய்வு செய்து வரும் ஜிம் லீவிஸ், மெக் அபீ' சுட்டிக் காட்டும் மிகச் சிறந்த நிபுணர்களில் ஒருவர். இதுகுறித்து லீவிஸ் கூறுகையில், பாதிக்கப்பட்டோர் வரிசையில் தைவான் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இரண்டும் இடம் பெற்றிருப்பதால், சீனா தான் இந்தத் திருட்டுகளை நடத்தியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது' என்றார்.
அமெரிக்காவின் ராணுவ ஒப்பந்த தாரர்கள் சிலரின் இணையதள விவரங் கள் திருடு போனது குறித்து 2009இல் "மெக் அபீ' ஆய்வு செய்த போது, இந்த விவரங்கள் கிடைத்ததாக அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு ஆபர ஷேன் ஷேடி ஆர். ஏ.டி.,' என "மெக் அபீ' பெயரிட்டுள்ளது.