கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், குழந்தைகள் , நீரிழிவு நோயாளிகள், கருவுற்ற பெண்கள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.
இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து?
பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை யூட்டி ஆகியவை இதில் உள்ளன. துருவைக் கரைத்தல், ஆணியை கரைத்தல், சுண் ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்படச் செய்யும் பாஸ்பாரிக் அமிலம், இதில் 55 சதவிகிதம் உள்ளது.
இதனால், கோலாவில் அமிலத் தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது. உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும், இதே அளவு அமிலத் தன்மை கொண்டது. கோலாவில் சர்க்கரையும், வாசனை யூட்டியும் சேர்க்கப்படுவதால், வினிக்கரை விட சுவையாக உள்ளது. கோலாவை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
கோலாவை குடித்தால் பற்கள் பாதிப்படையும் பல்லில் குழி விழும், நம் பல்லை, இது போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு வைத்தால், பல் மிருதுவாகி விடும். 250 மி.லி .பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது. உடலுக்குத் தேவையான சத்துக்களோ, வைட்டமினோ, தாதுப் பொருள்களோ இதில் இல்லை.
இதில் உள்ள சர்க்கரை, உடனடி யாக ரத்தத்தில் கலந்து, கொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால், உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது.
குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின் றனர். சர்க்கரையும், காபீனும் இதில் இருப்பதால், இந்த நிலை ஏற்படுகிறது. ஒரு கப் காபியில் 70-_125. தேநீரில் 15_75, கோகோவில் 10-17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60_70 மி.கி., அளவுள்ள காபீன், 360 மி.லி., கோலா பானத்தில் 50-_65 அளவு உள்ளது.
இதில் உள்ள அமிலமும், காபீனும், வயிற்றில் உள்ள புண்ணை அதிகரிக் கின்றன. உடலிலிருந்து சுண்ணாம்புச் சத்து வெளியேற, காபீன் காரணமாக அமைகிறது.
காபீனுடன், குளிர் பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்து, எலும்பு தேய்மானத்தை உருவாக்கி விடுகின்றன. இதனால், எலும்பு முறிவு ஏற்பட்டு விடுகிறது.
காபீன், இதய செயல்பாட்டையும், மத்திய நரம்பு மண்டலத்தையும் ஊக்கு விக்கிறது. இதனால், அதிக இதயத் துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகி யவை ஏற்படுகின்றன. குழந்தைகள் அதிகத் துடிப்புடன் தூக்கம் வராமல் அவதிப்படுவர்.
தூங்கினாலும், அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால், பெற்றோர் திண் டாடும் நிலை ஏற்படும். காபீன், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்யும்.