06 .பக்கல்.8ஆம்.மாதம்.2011-இறுதிப்போர் நடைபெற்ற பகுதிகளுக்கு அமெரிக்க படை அதிகாரிகள் பயணம்! போரைநடத்தியவர்கள் பார்வையி்ட்டு பாராட்டினார்ளா? சென்றவர்கள் புனிதர்களா! காட்டியவர்கள் புத்தர்காந்தியா?
அமெரிக்க பாதுகாப்பு உயரதிகாரிகள் குழு ஒன்று அண்மையில் வன்னிக்கு சென்று இறுதிப்போர் நடைபெற்ற இடங்களை பார்வையிட்டதுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் கட்டளைத்தளபதிகளையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினர் என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதரக உயர் பாதுகாப்பு அதிகாரி லெப்டினன் கேணல் பட்ரிக் ஜே. சு{ஹலர் தலைமையிலான படை அதிகாரிகள் கடந்த முதலாம் திகதி கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்கள். இப்பயணத்தின் போது இவர்கள் கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவை சந்தித்து கலந்துரையாடினர்.
இராணுவ கட்டளை தளபதிகள் கிளிநொச்சியில் போர் நடைபெற்ற பகுதிகளை கூட்டிச்சென்று காட்டியுள்ளார்கள்.