06.08 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தலைவர் கேணல் இரமேசை படையினர் கைது செய்யவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்பாய ராயபட்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களே இல்லை என்றும் சொலக்கூடியவர் இதைவிடவேறு எதுவும் சொல்லாமல் இருப்பதே ஆச்சரியம்.
இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடே ஊடகத்திற்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கேணல் இரமேச் ( என்னைப் போன்ற ) என்று ஏன்சொல்ல வில்லை?ஓர் கொடூரமான கொலையாளி என அவர் தெரிவித்துள்ளார்.
புலிகளிடம் சரணடைந்த 650 காவல்துறையினரை கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவத்துடன் ரமேசிற்கு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினால் இரமேச் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்த பிக்குகள், அப்பாவி பொதுமக்கள் போன்றோரை படுகொலை செய்த குற்றச்சாட்டுக்களுடன் ரமேஷிற்கு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதி ஒருவர் பற்றி பேசுவதற்கு தாம் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கேணல் இரமேசை அடையாளம் காண்பதற்கு இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்கள் படையினருக்கு உதவி வழங்கியதாக மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் இந்த தரவுகள் வெளியிடப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் மனித உரிமைக் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.
இடம்பெயர் மக்களுடன் கேணல் ரமேசும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேணல் இரமேச் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள காட்சிகள் கடந்த காலங்களில் ஊடகங்களில் ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.