குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இலங்கையின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டு வருவதாக ஐ.நா அறிவிப்பு

 05.08. 2011  இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் அரசாங்கம் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார். மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இன்னமும் உத்தியோகபூர்வமாக தமக்கு கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த அறிக்கை தொடர்பில் தற்போதைக்கு எவ்வித கருத்துக்களையும் வெளியிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
தேசிய ரீதியில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்வினையும் சர்வதேச சமூகம் மிக உன்னிப்பாக கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பிலான கருத்துக்களை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.