குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இலங்கைத் தமிழர்களின் நலனே முதன்மையானது – எசு.எம். கிருசுணா-உண்ணாவிரத நாடகத்தைவிட உச்சநாடகமோ!

04 .08. 2011  இலங்கைத் தமிழர்களின் நலனே முதன்மையானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எசு.எம். கிருசுணா தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையான தீர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் தமிழர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
வடக்கின் அபிவிருத்திப் பணிகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை, செனல்4 ஆவணப்படம் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், சிறுபான்மை தமிழ் மக்களின் நலன்களை உறுதிப்படுத்துவது குறித்தே இந்திய மத்திய அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். நியாமான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
அவசரகாலச் சட்டம் அகற்றப்பட வேண்டும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட வேண்டும், யுத்த வலய மக்களின் நலன்களை உறுதிப்படுத்தப்பட வேண்டும் போன்ற காரணிகளை தாம் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கத்திற்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய மீனவர்களின் நலன்களை உறுதிப்படுத்துமாறு பல தடவைகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய பாராளுமன்றில் இலங்கை விவகாரம் பற்றி உரையாற்றிய போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


தமிழக அகதி முகாம்களை மேம்படுத்த 25 கோடி ஒதுக்கீடு.
04 .08.2011 
தமிழக மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை ஈழத்தமிழ் மக்கள் அனுபவிக்க வழி செய்யப்படும்
தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக அரசு பதவியேற்ற பின் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். ஆதனால் இந்த பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது. தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்; இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பாக பேசும் போது தமிழக மக்கள் என்னென்ன உரிமைகளை எல்லாம் அனுபவிக்கிறார்களோ அதே உரிமைகளை இலங்கைத் தமிழ் அகதிகள் பெற்றுக் கொள்ளும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அவர்கள் வசிக்கும் அகதி முகாம்களில் நிலை குறித்து அரசு  கவனம் கொண்டுள்ளது அகதி முகாம்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும். அவர்களின் குடியிறுப்புகளை மேம்படுத்தவும் இந்த ஆண்டு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளாதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.