03 .03.2011 சுவிசு எசு எவ்-1(sf-1) தொலைக்காட்சியில்.கொலைக்களம் காட்சி இலங்கையுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்க முடியாது என இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கோருவதனைப் போன்று இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா உறவுகளை துண்டித்தால், சீனா அதன் மூலம் கூடுதல் நன்மை அடையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோவுடன் நடைபெற்ற சந்;திப்பின் போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையுடனான உறவுகள் துண்டிக்கப்பட்டால் அதன் மூலம் சீனா தந்திரோபாய ரீதியான அணுகூலங்களை அடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு சீனா ஏற்கவே ஆதரவளித்து வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் இலங்கைக்கு சீனா பாரியளவில் ஆதரவுகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.