குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

நெடுந்தீவிலிருந்து 60 யுவதிகள் கடற்படையின் தையல் பயிற்சிக்காக காலிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

03.08. 2011  கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுந்தீவுப் பகுதியிலிருந்து 60 யுவதிகள் கடற்படையின் விசேட தையல் பயிற்சிக்காக காலிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள பொது அமைப்புக்களின் எதிர்ப்புக்களின் மத்தியில் இவர்கள் 60 பேரும்  அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது கிழக்கு மாகாண ஆளுனரான மொகான் விஜயவிக்கிரம நெடுந்தீவுப் பகுதியில் தங்கியிருந்து பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அவ்வேளையில் நெடுந்தீவுப் பகுதியில் பொதுசன ஐக்கிய முன்னணியின் பெயரில் போட்டியிட்ட ஈபிடிபி வெற்றி பெற்றால் கடற்படையினரின் சீரூடை தைக்கும் பணிகள் நெடுந்தீவிலேயே முன்னெடுக்கப்படும் என உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில்  கடற்படையினரின் சீரூடை தைக்கும் நடவடிக்கைகளுக்காகவே  இவர்கள் 60 பேரும் பயிற்சிக்கென காலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கடற்படையின் அழைப்பை அடுத்து இவர்கள் பங்கெடுத்ததாகவும் எனினும் இவர்களுக்கு ஆலோசனை வழங்க முற்பட்ட பலரும் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
 ஏற்கனவே கிளிநொச்சிப் பகுதயில் இவ்வாறு ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை பல்வேறு தரப்புகளும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது கடற்படையினரின் சீருடை தைப்பதற்காக பயிற்சி வழங்குவதற்காக நெடுந்தீவிலிருந்து 60 யுவதிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு 10 நாள் பயிற்சிகள் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அவர்களை கடற்படையினர் நேர்முகப் பரீட்சைக்கு அழைத்ததாகவும் 60 யுவதிகள் நேர்முகப் பரீட்சைக்கு சென்றதாகவும் அந்த 60 பேருமே தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் காலி கடற்படை முகாமிற்கு பயிறிசிக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.