குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

கட்டுரைகள்

எப்படி மக்களுக்காக போராடுவது? பூநகரி விமலேசுவரன் கொலைபற்றியது!

28.11.2020....."மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்", "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்." என்று கோரிப் போராடினான் என்பதற்காக, விமலேசுவரன் 32 ஆண்டுக்கு முன்பு புலிகளால் வீதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டான்.

மேலும் வாசிக்க...
 

கமலாவோ விமலாவோ கையாள, கட்டமைப்பு வேண்டுமே? நிலாந்தன் 16.11.2020

கமலா காரிசு அமெரிக்க துணை சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் உற்சாகம் மேலிட்டுள்ளது. அதிலும் சற்று கற்பனை கூடிய சிலர் கமலாவின் பூர்வீகத்தை இந்தியாவில் இருந்து பெயர்த்து எடுத்து மானிப்பாய் வரை கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். வேறு சிலர் கமலா காரிசின் அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் வேரைக் கொண்ட பெண்ணாகிய ரோகிணி இலச்சுமி கொசோக்லு குறித்தும் பெருமைப்படுவதாகத் தெரிகிறது.

மேலும் வாசிக்க...
 

இந்து மதம் பெயர் வந்தது எப்படி? யாழ்ப்பான சமயப் பெரியார் இலக்கிய கலாநிதி பண்டிதர் மு. கந்தையாபிள்ளை!

07.11.2020...'இந்து என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்' என்றொரு காச்டாக் சமூகவலைத் தளங்களில் சுழன்றுக்கொண்டிருந்தது. அப்படி தங்களை பெருமையாக அழைத்துக்கொள்வோர் பலருக்கும் பிரிட்டிச் என்றால் மூக்கு வேர்க்கும் , கண்கள் சிவக்கும். 'மெக்காலே கொண்டு வந்த கல்வி' என்றால் மிசனரி, ஆபிரகாமிய சதி, கிருத்துவ கைக்கூலி என வார்த்தைகள் சரளமாக வந்து கொட்டும். ஆனால் ஆங்கிலேயன் வைத்த 'இந்து' எனும் சொல்லாடல் மட்டும் இனிக்கும், ஒலிக்கும், பெருமையாக இருக்கும். 

மேலும் வாசிக்க...
 

இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் -வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள். அந்தநாள் ஞாபகம்நெஞ்சிலே

வந்ததே…! -சிறப்புக் கட்டுரை.27 அக்டோபர், 31.10.2020....செல்வச்செழிப்பும் மேற்கத்திய நாகரிகமும் நிறைந்த மோதிலால் நேருவின் இல்லமான 42 அறைகள் கொண்ட ஆனந்தபவன் மாடியில் விலை உயர்ந்த, மேற்கத்திய உடைகள், இறக்குமதி செய்யப்பட்ட மரச்சாமானங்கள், இன்னபிற ஆடம்பரப் பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தன. அந்நியப் பொருட்களைப் புறக்கணிக்க காந்தி நாட்டுமக்களுக்கு விடுத்த அறை கூவலையொட்டி ஆனந்தபவனில் அரங்கேறிய இந்தக் காட்சியே சிறு குழந்தையான இந்திரா (இந்து) அறிந்துகொண்ட முதல் அரசியல் நிகழ்வு.

மேலும் வாசிக்க...
 

இலங்கைத் தமிழ் மண்ணில் பிறந்த எவரும் , இனிமேலாவது , இராவணன் என்ற ஒரு தமிழ் மன்னன் , வாழ்ந்ததாகச்

சரித்திரம் இல்லை என்று கூறக்ககூடாது! ...கன்னியா_மலையில்_காணப்படும்  இராவணனின் தாயின்_சமாதிஅது  தொடர்பான ஆய்வுகளும், ஆதாரங்களும் என்.கே.எஸ்.திருச்செல்வம் 30.10.2020......திருகோண மலையின் அருகில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவ்வெந்நீர்க் ஊற்றுகளைச் சுற்றி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெந்நீர் ஊற்றுகள் சிவபக்தனான இராவணன் தன் தாயின் ஈமக் கிரிகைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கியவையாகும்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 19 - மொத்தம் 166 இல்