தேர்தல் திருவிழாவை முன்னிட்டு பல கடைகள் அரச தரப்பினரால் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாழ்க்கைச் செலவு உயர்வு, இனவாதம்,தனிநபரின் சாதனைகள், குறைபாடுகள் என பலவிதமான பொருட்களும் அமோகமாக விலை போகவுள்ளன. இந்த வியாபாரத்தில் வெற்றிபெற கொலைகள் உட்பட வன்முறைகள், இலஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் என்பன தாராளமாகவே கட்டவிழ்த்து விடப்படும்.