இலங்கையின் சனாதிபதித் தேர்தல்கள் உண்மையிலேயே சிங்கள பெரும்பான்மை மக்களை நோக்கியே நடத்தப்படுகின்றன. ஆனால், அந்த தேர்தல் முடிவுகளில் சிறுபான்மை மக்கள் அவ்வப்போது பெரும் தாக்கங்களைச் செலுத்தி வந்திருக்கின்றனர்.2005ஆம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் வாக்களிக்காது பகிசுகரித்தமை தேர்தல் முடிவுகளில் பாரிய தாக்கம் செலுத்தியிருந்தது.