குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

கட்டுரைகள்

இந்துப் பெரும்பான்மையை உயர் சாதியினர் எப்படி கட்டமைத்தனர்? - 1

30.04.2022....இந்து மதம் அம்பேத்கர் காங்கிரசு காந்தி பார்ப்பனர்கள் இந்திய வரலாறு

இந்து என்னும் சொல்!

முதன் முதலாக இந்து என்கிற வார்த்தை கி.மு. ஆறாம் நூற்றாண்டில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்து நதியைச் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிக்க அச்செமனிட் பாரசீகர்கள் இந்து என்கிற வார்த்தையைப் பயன்படுத்தினர். இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் இது சிந்து எனவும் அறியப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க...
 

குமரிக்கடலில் மூழ்கிக்கிடக்கும் தமிழர் வரலாறு.

21.04.2022.....-ஒரிசா பாலு (எ) சி.பாலசுப்பிரமணி, கடல்சார் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்.

தமிழர்களின் சிறப்புமிகு தொன்ம வரலாற்றை  அறியவேண்டும் என்றால் அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் தேடிக்கொண்டிராமல் கடலுக்குள் தேடினால்தான் முழுமையாகக் கிடைத்தறியப் பெறும்..தமிழ்நாட்டின் உறையூரில் பிறந்து தமிழ்நாட்டில் கல்வி கற்று வளர்ந்திருந்தாலும்கூட ஒரிசா மாநிலத்தில் நான் பணியாற்றிய ஆண்டுகளில் தமிழ், தமிழர்களுக்கும் ஒரிசாவுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டு என் தேடலை, ஆய்வைத் தொடங்கினேன்..  என் அந்தத் தேடல்ப் பயணம்  இறுதியில் தென்குமரிக்கடலை நோக்கிச் சென்றது.

மேலும் வாசிக்க...
 

சித்திரை” முதல் நாளில் புத்தாண்டுப் பிறப்பதில்லை ! (இது ஒரு மீள் பதிவு)

01.04.தி.ஆ 2053....14.04.2022.....தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் “தை”யா ? “சித்திரையா ? என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழ்ப் பணிமன்றத்தில் கடந்த 06-01-2019 அன்று வெளியிடப்பட்டது. ”தை” முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என அக்கட்டுரையில் தெளிவுபடுத்தப் பட்டிருந்தது.

மேலும் வாசிக்க...
 

இரசியா-உக்ரைன் பிரச்சினையும் அமெரிக்காவின் ஒற்றுமை அரசியல் முன்நகர்வுகளும்.தி.திபாகரன்

05.03.2022....இன்று கிழக்கு ஐரோப்பாவில் இரசியா-உக்ரைன் மோதல் என்பது வெறுமனே ஒரு நில ஆக்கிர மிப்புக்கான அல்லது ஒரு நாட்டை ஆக்கிரமிப்பதற்கான போர் என எழுந்த மாத்திரத்தில் பேசிட முடியாது. அது ஒரு வரலாற்று ரீதியான மனிதகுல நாகரிக வளர்ச்சியோடும், மனிதக் குழுக்களின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்தல் என்ற அடிப்படையில் அது ஒரு புவிசார் அரசியல் பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டும்.

மேலும் வாசிக்க...
 

தனித்துவிடப்படும் பாதிக்கப்பட்ட மக்கள்?அரசியல் கட்டுரைகள் நிலாந்தன்.

வாசித்தபின் எனக்கு புரிந்தது ....எல்லாக்கட்சிகளின்  போராட்டமும் எல்லாத் தமிழர்களையும் காணாமல் போனோர் பட்டியலில் இணைப்பதாகும். இது இந்த மாதத்தின் முக்கியமானதாகும் என்பதால் குமரிநாடு. கொம் இணையத்தில் வெளியிடுகின்றேன். 200 பேரையே கூட்டிய அதிகூடிய வாக்குப்பெற்றவர்களின் வங்குரோத்து நிலை!

28.02.2022.கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கில் மூன்று மாவட்டங்களில் மூன்று வேறு அரசியல் நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது, யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வடபகுதிக்கான மாநாடு.இரண்டாவது,முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப் பற்று பிரதேச செயலகத்தின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாடு. மூன்றாவது,கிளிநொச்சியில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதி கோரிய ஒரு கவனயீர்ப்புப் போராட்டம்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 7 - மொத்தம் 166 இல்