குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

உலக செய்திகள்

பாலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலேத்தை அங்கீகரிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை

எதிர்காலத்தில் அமைய இருக்கும் பாலத்தீன நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை ஏற்கக்கோரி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க இருக்கிறார்கள் என்பதை குறிப்புணர்த்தக்கூடிய, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆவணம் ஒன்று தன்னிடம் கிடைத்திருப்பதாக, இஸ்ரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்திருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

சர்வதேச விண்வெளி மையத்துக்கு புதிய சாதனங்கள் பொருத்தப்பட்டன

அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில் தாம் கொண்டு சென்ற புதிய சாதனங்களை சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் சனிக்கிழமை பொருத்தினர்.

அதற்காக அவர்கள் விண்ணில் நடந்தனர். சில பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டனர். இந்தப் பயணத்தின்போது மொத்தம் 3 தடவைகள் விண்ணில் நடை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டு 2 ஆவது நடையில் இந்தப் பணிகளை முடித்தனர். அடுத்த நடைப்பயணத்தை நேற்று திங்கட்கிழமை முடித்தனர்.

மேலும் வாசிக்க...
 

எட்டும் தூரத்தில் இருந்தும் ஒசாமாவை பிடிக்க புஷ் அரசு முயற்சிக்கவில்லை - செனட் சபைக்கான அறிக்கை

ஆப்கானிஸ்தானில், கடந்த 2001 ஆம் ஆண்டு ஒசாமா தான் இருந்ததாகவும், ஆனால் ஒசாமாவை பிடிப்பதற்கான இராணுவ வசதிகளை அப்போதைய அதிபர் புஷ் தலைமையிலான அரசு பயன்படுத்த தயாராக இல்லை என்று அமெரிக்க செனட் சபைக்கான அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஒசாமா பின் லாடன் மிகவும் பலவீனமாக இருந்த அந்த தருணத்தில் அவரை பிடிக்க முயற்சிக்காமல் போனதால், ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கிளர்ச்சி மற்றும் பாகிஸ்தானில் ஸ்திரமற்ற நிலை உருவாவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியுறவு கமிட்டிக்காக ஜனநாயக கட்சி பணியாளர்களால் தயார் செய்யப்பட்டுள்ளது.

 

 

இங்கிலாந்து ஐரோப்பாவின் கருக்கலைப்பின் தலைநகர்!

ஐரோப்பிய நாடுகளிலேயே இளம் பெண்கள் மிக அதிகமாக கருக்கலைப்புச் செய்வது இங்கிலாந்தில்தான் என்று தெரிவிக்கும் ஆய்வு, ஐரோப்பாவின் கருக்கலைப்புத் தலைநகராக இங்கிலாந்து முடிசூடிக் கொண்டுள்ளது என்றுக் கூறியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சீனாவில் கறுப்புச் சிறைகள்: மனித உரிமை குற்றச்சாட்டு

சீன அரசின் காவல் உள்ளிட்ட அமைப்புகள் குடிமக்களைக் கடத்திச் செல்வதும், அவர்களைக் கறுப்புச் சிறைகள் என்றழைக்கப்படும் அறைகளில் சட்டத்திற்குப் புறம்பாக பல நாட்கள் அல்லது மாதங்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்து வருவதாகவும் மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றம் சாற்றியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்கா முன்நிற்க வேண்டும்: பான்-கி-மூன்

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பருவநிலை மாற்றப் பிரச்சனை தொடர்பான மாநாடு வெற்றி பெற அமெரிக்கா முன்நின்று செயல்பட வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

அணு ஆயுத குறைப்பு நடவடிக்கைக்காக முயற்சி மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு 'நோபல் பரிசு' வழங்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

வயசோ 17, கொலையோ 30 !!!

தமாஷ் என்று தான் முதலில் நினைத்தார்கள். ஒரு டீன் ஏஜ் பெண் சிரித்துக் கொண்டே “நான் 30 பேரைக் கொன்றிருக்கிறேன்” என்றால் யார் தான் நம்புவார்கள் ? ஆனால் கொன்ற நபர்களின் பட்டியலையும், கொலை செய்த நுணுக்கங்களையும் அவள் விவரிக்க ஆரம்பித்தபோது தான் பிரேசில் காவல் துறையே ஒட்டுமொத்தமாக அதிர்ந்தது.

மேலும் வாசிக்க...
 

டென்மார்க்கில் குறைந்த வயதில் ஓய்வூதியம் எடுப்போர் தொகை அதிகரிக்கிறது !

டென்மார்க்கில் குறைந்த வயதிலேயே ஓய்வூதியம் பெறுவோர் தொகை அதிகரித்து வருவதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.