குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

உலக செய்திகள்

யேமன் தூதுரகங்களை அமெரிக்காவும் பிரிட்டனும் மூடியுள்ளன

அந்நிய சக்திகளின் இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அல் கொய்தா தொடர்ந்து விடுத்து வரும் அச்சுறுத்தல் காரணமாக யேமனில் இருக்கின்ற தூதரகத்தை அமெரிக்காவும், பிரிட்டனும் மூடியுள்ளன.

மேலும் வாசிக்க...
 

இராக்கில் பிரிட்டிஷ் பிணைக்கைதி விடுவிக்கப்பட்டார்

ஈராக்கில் இரண்டரை ஆண்டுகளுக்கும் அதிகமாக பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பீட்டர் மூர் என்ற அந்த நபர் ஒரு கணினி நிபுணராவார். புதன்கிழமை காலை இவர் விடுவிக்கப்பட்டதாகவும் பிறகு அவர் பாக்தாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறைச் செயலர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்க மற்றும் பிரிட்டனின் கருத்துக்களுக்கு இரான் கடும் எதிர்ப்பு

போராட்டக்காரர்களை அடுக்கும் போலீசார் இரானில் ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெற்ற வன்முறை கலந்த போராட்டங்களில் குறைந்தது எட்டுபேர் இறந்தது குறித்து, அமெரிக்காவும் ஐரோப்பாவும் வெளியிட்டிருந்த கருத்துக்களுக்கு, இரான் கடும் கோபத்துடன் எதிர்வினையாற்றியிருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்காவில் பாதுகாப்பு நடைமுறைகளில் பெரியளவில் மாற்றங்கள்

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் சென்றிரங்கவிருந்த ஒரு விமானத்தை வெடிவைத்து தகர்க்க நைஜீரியப் பிரஜை ஒருவர் இரண்டு நாட்கள் முன்பு முயன்றதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு நடைமுறைகளில் பெரிய அளவிலான மாற்றங்களுக்கு அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பரந்துபட்ட கொள்கை மீளாய்வுகளுக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க தொலைக்காட்சியில் உரையாற்றிய வெள்ளை மாளிகை அதிகாரி ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

பாப்பரசரை மோதிய பெண்

ரோமில் நடந்த கிறிஸ்துமஸ் தின பிரார்த்தனைக்கு நடந்து சென்றுகொண்டிருந்த பாப்பரசர் பெனடிக்ட் அவர்கள் மீது பெண் ஒருவர் மோதி அவரை தரையில் தள்ளிவிட்ட சம்பவம் நடந்த சில மணிநேரங்களில், பாப்பரசர் தமது வருடாந்த கிறிஸ்துமஸ் செய்தியை வழமை போல் வாசித்தார்.

புனித பீட்டர் சதுக்கத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் மத்தியில் அவர் உறுதியான குரலில் உரையாற்றினார்.

மேலும் வாசிக்க...
 

போப் 12 ஆவது பயஸுக்கு புனிதர் பட்டம் வழங்க நடவடிக்கை

பயஸ்நாசிக்கள் காலத்தில் போப்பாக இருந்த 12 ஆவது பயஸ் அவர்களுக்கு ரோமன் கத்தோலிக்க புனிதர் பட்டம் கொடுக்கப்படுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பான தனது நடவடிக்கைகளை வாத்திகன் நியாயப்படுத்தியுள்ளது.

இது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கக் கூடாது என்று அது கூறியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

கோபன்ஹேகன் மாநாடு பெரும் தோல்வி என்கிறது ஸ்வீடன்

கோபன்ஹேகனில் சென்றவாரம் நடந்து முடிந்த காலநிலை மாநாடு ஒரு பெருந்தோல்வி என்று ஸ்வீடன் சுற்றாடல் அமைச்சர் அந்திரியாஸ் கார்ல்க்ரென் வர்ணித்துள்ளார்.

பருவநிலை மாற்றம் தொடர்பில் அடுத்து என்ன செய்வது என்று விவாதிக்கும் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களின் கூட்டத்துக்காக பிரஸ்ஸல்ஸ் வந்திறங்கிய கார்ல்ஜென், நிஜமாகவே மாநாடு ஒரு மாபெரும் தோல்வி என்று கூறினார்.

மேலும் வாசிக்க...
 

வங்க மொழியை ஐ. நாவின் அதிகாரப்பூர்வ மொழியாக்கக் கோரிக்கை

வங்க மொழி ஐ நாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும் என்று வங்கதேச அரசு கோரியுள்ளதை ஆதரித்து ஒரு தீர்மானத்தை மேற்கு வங்க சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது.

வங்க மொழி 25 கோடி மக்களால் பேசப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலும், வங்கதேசத்திலும் வசிப்பவர்கள்.

மேலும் வாசிக்க...
 

லண்டனில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம்

கண்காணிப்புப் பணிகள் தீவிரம்

மும்பையில் தீவிரவாதிகள் புகுந்து வெறித் தாக்குதல் நடத்தியது போல, அடுத்த வருட  ஆரம்பத்தில் லண்டனில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் எச்சரித்துள்ளனர். லண்டன் நகரிலுள்ள சில முக்கிய தொழிலகங்களை குறிவைத்து மும்பை பாணியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்  என புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளமையை அடுத்து, லண்டனிலுள்ள தீவிரவாதத் தடுப்புப் பொலிஸார் கண்காணிப்புப் பணிகளை  தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவில் கடும் குளிர்

கடும் குளிரால் மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போலந்தில் வெப்ப நிலை கிட்டதட்ட மைனஸ் இருபது பாகையை தொட்டு விட்டது. இதில் குறைந்தப்பட்சம் பதினைந்து பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு இல்லாதவர்கள் அல்லது குடித்துவிட்டு இரவில் வெளியே சுற்றியவர்கள்.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.