குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

உலக செய்திகள்

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை அதிகரிக்கப்படும் - டேவிட் கேமரூன்

உக்ரைன் அரசுக்கு எதிராகப் போராடிவரும் கிளர்ச்சியாளரகளுக்கு ரஷ்யா உதவிபுரிந்தால், அதன் மீதான பொருளாதாரத் தடைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்கு பகுதியில் தன்னாட்சி கோரிப் போராடிவரும் கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் அரசு படைகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அங்கு கடந்த சில நாட்களாக மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

மேலும் வாசிக்க...
 

உலகின் பயங்கர பெண் தீவிரவாதி சுட்டுக்கொலை உக்ரைன் அரசு மறுப்பு

உலகின் பயங்கர பெண் தீவிரவாதி, உக்ரைன் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இதை உக்ரைன் அரசு மறுத்துள்ளது. உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதியாக கருதப்பட்டு வந்தவர் சமந்தா லெவ்த்வெயிட் (வயது 30). ‘ஒயிட் விடோ’ (வெண்விதவை) என்று அழைக்கப்பட்ட லெவ்த்வெயிட், கடந்த 2011 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மாம்பசா என்ற இடத்தில் ஓட்டல்களையும், வணிக மையத்தையும் தகர்க்க முயன்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர்.

மேலும் வாசிக்க...
 

10 ஆண்டுகளுக்கு முன் அனுப்பிய ரோசட்டா விண்கலம் வால்நட்சத்திரத்தில் தரையிறக்கம்

பாரீஸ்: ஐரோப்பிய விண்வெளி ஏஜன்சி 10 ஆண்டுகளுக்கு முன் அனுப்பிய ரோசட்டா என்ற விண்கலம், விண்வெளியில் 640 கோடி கி.மீ தூரம் பயணம் செய்து 67பி என்ற வால்நட்சத்திரத்தில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. சூரிய குடும்பத்தையும், வால்நட்சத்திரங்களையும் ஆராயும் பணியில் ஐரோப்பிய விண்வெளி ஏஜன்சி ஈடுபட்டுள்ளது.  கடந்த 1969ம் ஆண்டு ஒரு வால்நட்சத்திரத்தை சோவியத் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சுரிமோவ், கெராசிமென்கோ ஆகியோர் கண்டறிந்தனர். அதற்கு அதை கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் பெயரை சூட்டப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

ஒரே செடியில் தக்காளி, உருளை காய்க்கும் அதிசயம்!

டோம்டேடோ என்ற செடியில் தக்காளியும் காய்க்கிறது, உருளைக் கிழங்கும் காய்க்கிறது. அதாவது செடியின் மேல் பகுதியில் தக்காளிகள் காய்த்துக் குலுங்குகின்றன, வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்குகள் காய்த்திருக்கின்றன. தக்காளியையும் உருளைக்கிழங்கையும் இணைத்து டோம்டேடோ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பே இதுபோன்ற முயற்சிகள் இருந்திருந்தாலும், தற்போதுதான் வணிக அளவில் வந்திருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்காவில் செல்போன் தடை செய்யப்பட்ட கிராமத்தை விரும்பும் மக்கள்

அமெரிக்கா, க்ரீன் பேங்க்: அமெரிக்காவில் உள்ள க்ரீன் பேங்க் கிராமத்தில் செல்போனின் சத்தத்தைவிட மாட்டின் சத்தம் தான் அதிகமாக கேட்கும். ஏனெனில் இங்குதான் உலகின் மிகவும் உணர்திறன் கொண்ட ரேடியோ தொலைநோக்கி உள்ளது. இந்த தொலைநோக்கி நட்சத்திரங்களின் பிறப்பு இறப்பையும், விண்வெளியில் இருக்கும் மெல்லிய ஒலியுடைய சிக்னல்களையும் படம்பிடிக்கும். இதனால் இங்கு எலக்ட்ரானிக் பொருட்களான மொபைல் மற்றும் வைஃபை தடை செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாத இந்த க்ரீன் பேங்க் கிராமத்தில் வயதான நோயாளிகள் வந்து தஞ்சம் அடைகின்றனர், அதனால் இந்த இடம் மெக்காவை(mecca) போல திகழ்கிறது.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்காவுக்கு மட்டும் எண்ணெய் விலையை குறைத்த சவுதி: சூட்சுமம் என்ன?

சவுதி அரேபியா அமெரிக்காவுக்கு மட்டும் எண்ணெய்யின் விலையை குறைத்ததால் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

சரிகிறது ஒபாமா செல்வாக்கு! செனட் சபை தேர்தல் முடிவுகளில் பின்னடைவு!

அமெரிக்காவில் செனட் சபையைக் குடியரசுக் கட்சி கைப் பற்றி உள்ளதால், ஒபாமாவின் செல்வாக்கு சரியத் தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் வாசிக்க...
 

உலகின் முதலாவது சாளரம்(யென்னல்) இல்லாத விண்ணுந்து!.

உலகின் முதல் சாளரம்( யன்னல்) இல்லாத விண்ணு ந்து(விமானம்) விரைவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க...
 

டேவிட் கமரூனுக்கு விழும் அடுத்த அடி. 1.7 பில்லியன் கட்டவேண்டும் !

26.10.2014 - இங்கிலாந்து வாழ் ஒவ்வொருவர் தலையிலும் மேலும் ஒரு சுமை தூக்கி வைக்கப்பட உள்ளது. ஆம் ஐரோப்பிய ஒன்றியம், 1.7 பில்லியன்(1700 மில்லியன்) பவுன்டுகளை ஒன்றியத்திற்கு செலுத்துமாறு இங்கிலாந்தைக் கோரியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சிங்கப்பூரரை மணக்கும் வெளி நாட்டவருக்கு புது விசா முறை.

சிங்கப்பூரரைத் திருமணம் புரிய விரும்பும் வெளிநாட்டவர், அடுத்த ஆண்டு முதல் திரு மணத்திற்கு முன்பே தனக்குச் சிங்கப்பூரில் தங்குவதற்கு நீண்ட நாள் விசா கிடைக்குமா என்ப தைத் தெரிந்துகொள்ளலாம். ‘எல்டிவிபி’ எனும் நீண்ட நாள் விசாவை விரைவாகப் பெறுவதுடன் வெளிநாட்டுக் கணவர் அல்லது மனைவி சிங்கப்பூரில் மேலும் எளிதாக வேலை தேடுவதற்கான நடவடிக்கைகளும் அமுல்படுத்தப்படும்.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.