குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

இந்திய செய்திகள்

ஆந்திர மாநில வேலை நிறுத்தத்தால் இயல்புநிலை பாதிப்பு

தெலங்கானா ஆதரவு போராட்டம்இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் தெலங்கானாப் பகுதியில் நடைபெற்ற வேலை நிறுத்தம் அங்கு இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

நாட்டின் பல பாங்களையும் தலைநகர் ஹைதராபாத்துடன் இணைக்கும் சாலைகள் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

இந்திய விசா நடைமுறைகளில் புதிய விதிமுறைகள்

இந்தியாவுக்கு சென்று திரும்பும் வெளிநாட்டவர்கள், இரு மாதங்களுக்குள் அங்கு மீண்டும் செல்வதை தடுக்கும் வகையில், நீண்ட கால சுற்றுலா விசாக்களுக்கு இந்தியா கடுமையான விதிகளை கொண்டுவருகிறது.

விசாக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவே இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கோபன்ஹேகன் மாநாட்டு முடிவுகள் இந்திய இறைமையை பாதிக்காது என்கிறார் அமைச்சர் ஜெயராம் ரமேஷ்

பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாட்டில் ஏற்பட்ட உடன்படிக்கை, இந்தியாவின் இறையாண்மையை எந்த வகையிலும் பாதிக்காது என்று இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கோபன்ஹேகன் மாநாட்டில் எட்டப்பட்ட உடன்படிக்கை தொடர்பாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தெலுங்கானா தனி மாநிலம் பிரித்துக்கொடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரத்தில் ஆர்ப்பாட்டங்கள்

 ஆந்திர மாநிலத்தை பிரிப்பது என்ற இந்திய மத்திய அரசாங்கத்தின் முடிவைக் கண்டித்து அந்த மாநிலத்தில் நடத்தப்படும் வேலை நிறுத்தத்தால் மாநிலத்தின் பல பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலத்தின் தெற்கு மற்றும் கடலோர மாவாட்டங்ககளில் வணிகங்களும், கடைகளும் மற்றும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்ததுடன், வாகனங்கள் வீதியில் ஓடவில்லை.

மேலும் வாசிக்க...
 

மும்பை தாக்குதலில் உயிரிழந்த ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த குண்டு துளைக்காத உடை எங்கே?

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தனது கணவரும், பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தலைவருமான ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த குண்டு துளைக்காத உடை எங்கே? என்று அவரது மனைவி கவிதா கர்கரே கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் வாசிக்க...
 

'லவ் ஜிகாத்' பற்றி ஆதாரம் இல்லை: கேரள டிஜிபி அறிக்கை

முஸ்லிம் அல்லாத இளம் பெண்களை முஸ்லிம் இளைஞர்களின் காதல் வலையில் சிக்கவைத்து பின்னர் அவர்களை இஸ்லாமுக்கு மாற்றும் "லவ் ஜிகாத்' முயற்சி பற்றி தெளிவான ஆதாரம் கிடைக்கவில்லை என்று கேரள உயர் நீதிமன்றத்தில் மாநில காவல் துறை புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

மேலும் வாசிக்க...
 

ராகுல்காந்திக்கு தொடர்ந்தும் புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது..

இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ராகுல் காந்திக்கு எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களால் அதிக அளவிலான அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய புலனாய்வு துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

இந்தியக் கடலில் சீன நடமாட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்: அமைச்சர் தகவல்

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 36 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.