பூநகரி ப.நோ.கூ.சங்கமானது தனதுசேவையை யேபுரம் முழங்காவிலுடன் மட்டுப்படுத்தியுள்ளது.இதனால் இச்சங்கத்தின் பயன்பாடு முழங்காவில் யேபுரம் வேரவில் பொன்னாவெளி.. நாச்சிக்குடா.. இரணைதீவுப் பகுதியில் மீளக்குடியேறிய மக்களுக்கு மட்டுமே சேவைபுரிகின்றது.வாடியடி மட்டுவில் நாடு கறுக்காய்த்தீவு நல்லூர்.. ஆலங்கேணி.. தம்பிராய்.. செட்டியகுறிச்சி..சித்தங்குறிச்சி ஞானிமடம்.. கௌதாரிமுனை.. வில்லடி நாலாம்கட்டை போன்ற மக்கள் அதிகமாக வாழ்ந்த ஊர்களில் உள்ள மக்களுக்கு கிளிநொச்சி கரச்சிப.நோ.கூ.சங்கம் தற்போது சேவைசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பூநகரியின் பிரதான பகுதிக்கு வராமல் யேபுரம் பகுதிக்கு சென்றமைக்கு சங்கத்தில் உள்ளவர்களின் தற்காலிக வீடுகள் அங்கு இருந்தமையே காரணம்.