குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

பூநகரி.ப.நோ.கூ.சங்கம் நிதிப்பற்றாக்குறையில் சேவையேபுரம் முழங்காவிலுடன் முடக்கம்.

பூநகரி ப.நோ.கூ.சங்கமானது தனதுசேவையை யேபுரம் முழங்காவிலுடன் மட்டுப்படுத்தியுள்ளது.இதனால் இச்சங்கத்தின் பயன்பாடு முழங்காவில் யேபுரம் வேரவில் பொன்னாவெளி.. நாச்சிக்குடா.. இரணைதீவுப் பகுதியில் மீளக்குடியேறிய மக்களுக்கு மட்டுமே சேவைபுரிகின்றது.வாடியடி மட்டுவில் நாடு கறுக்காய்த்தீவு நல்லூர்.. ஆலங்கேணி.. தம்பிராய்.. செட்டியகுறிச்சி..சித்தங்குறிச்சி ஞானிமடம்.. கௌதாரிமுனை.. வில்லடி நாலாம்கட்டை போன்ற மக்கள் அதிகமாக வாழ்ந்த ஊர்களில் உள்ள மக்களுக்கு கிளிநொச்சி கரச்சிப.நோ.கூ.சங்கம் தற்போது சேவைசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பூநகரியின் பிரதான பகுதிக்கு வராமல் யேபுரம் பகுதிக்கு சென்றமைக்கு சங்கத்தில் உள்ளவர்களின் தற்காலிக வீடுகள் அங்கு இருந்தமையே காரணம்.

மேலும் வாசிக்க...
 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் த தே கூ முடிவில் தொடர்ந்து தாமதம்

த.தே.கூ தேர்தல் குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை. இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கான அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்துக்கும் மேலாகியுள்ள நிலையிலும், இரு பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களும் தங்களது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற நிலையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இந்தத் தேர்தல் தொடர்பில் தங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரை தெரிவிக்காமலேயே உள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் - சரத் பொன்சேகா

இலங்கையின் வடக்கே தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பிரதான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகிய சரத் பொன்சேகா அவர்கள், நாட்டில் தற்போது உள்ள ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கின்றார்.

சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த சரத் பொன்சேகா அவர்கள் ஞாயிறன்று மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் இடம்பெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும் வாசிக்க...
 

குமரிநாடு.நெற் இணையதளம்2010ஆம் ஆண்டு பிறந்திருக்கும் வேளையில் வாழ்த்தி நிற்கின்றது..

”மனத்துக்கண் மாசிலன் ஆதல்அனைத்துஅறன்
ஆகுல நீர பிற”

ஒருவன் தன்மனத்தில் குற்றமற்றவனாக இருக்கவேண்டும் அதுவே அறம்(நீதி) ஆகும்.மற்றவையெல்லாம் ஆரவாரத்தன்மை கொண்டவையாகும். இவ்வாண்டு உலகமக்கள் இயற்கை பற்றியும் உயிர்களிடத்தில் மதிப்பும் கொண்டு வாழவேண்டும். சென்றாண்டு நிகழ்ந்த இனஅழிப்பை உலகத்தமிழர் மறந்துவிடக்கூடாது.அம்மக்களின் நலன் மேம்பட எல்லோரும் உழைக்கவேண்டும்.

மேலும் வாசிக்க...
 

சனாதிபதித்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது?

05.01.2010 இல் பிரசுரிக்கபட்டது.
"தை பிறந்தால் வழிபிறக்கும்." இதனடிப்படையில் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் சற்று நிம்மதிக் காற்றை சுவாசிக்க முன்னர் இத்தேர்தல் வந்து குழப்புகின்றது. தமிழராகிய நாம் யாரை ஆதரிப்பது என்பதே அந்தக்குழப்பம். அதற்கான மேல்வாரியான ஒரு ஆய்வாகவே இது அமைகின்றது. காரணம் நுணுக்கமாக ஆய்வுசெய்தால் தமிழரின் அரசியல் நகர்வு எதிரிக்கு வாய்ப்பாகிவிடும் எனவே தமிழராகிய நாம் ஆழமாக அடுத்தகட்ட நகர்வுகளை கருத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவும் இன்றைய நிலையும்.

இக்கட்சியின் முடிவு காலத்தின் தேவைகருதியதாக அமைந்துள்ளது. அதாவது தனித்தோ அல்லது மகிந்தாவிற்கோ களத்தில் நிற்பதில் எதுவிதபயனுமில்லை என்பது கட்சியின் முடிவாகும். இதன்முடிவில் தமிழ் மக்களின் பங்களிப்பு மிகஅவசியமாகும். இக்கட்சியிடம் அரசியல் நகர்வை எமது தலைவர் முற்கூட்டியே ஒப்படைத்தமை தீர்க்கதர்சன சிந்தனையில் இதுவும் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே தான் கட்சியின் முடிவை தமிழ் மக்களாகிய நாம் ஆதரிக்கவேண்டிய காலமாகும். இல்லையேன் நாம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் எங்கள் இலட்சியத்தை அடையமுடியாமல் போய்விடும். கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களிற்கு அடுத்துவரும் தேர்தலில் நாம் அவர்களிற்கான தண்டனையை வழங்க முடியும் எனவே அதுபற்றி இப்போது நாம் கவலைப்படாமலும், விமர்சனம் செய்யாமலும் இருப்பதே காலத்தின் கட்டாயமாகும்.

மேலும் வாசிக்க...
 

அமைச்சர் சந்திரசேகரன் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்..

மலையகத்தின் தனியுரிமை அரசியலை மாற்றியவர். மலையக இளைஞர் இடையே எழுச்சியை ஏற்படுத்தியவர்.
2006..2007 களில் தமிழ் இளைஞர்கள் மலேசியாவில் பல துன்பங்களை அனுபவித்தவேளையில் உலகதமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாட்டிற்கு சென்றபோது அதை நேரடியாக உணர்ந்து மலேசிய அரசு மட்டத்தில் பேச்சுக்களை நடத்தினர்.2005 இல் வடக்கு கிழக்கு மக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்கும்படி பல முறை கோரினார் .. கிளிநொச்சிக்கும் சென்றிருந்தார். தமது கொழும்பு செயலாளர் விக்கிரமசிங்க மூலம் பல தமிழ் இளைஞர்களுக்கு உதவிகள் புரிந்தார்.இதனால் அக்காலகட்டத்தி்ல் பல நெருக்கடிகளை எதிர் கொண்டார்.. அவரின் எளிமையான அரசியல் நடவடிக்கைகளை எண்ணி குமரிநாடு இணையத்தளம் தமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கின்றது..
குமரிநாடு குழுமம் www.kumarinadu.net 

 

மலையக மக்கள் முன்னணியின் தலைவியாக திருமதி சந்திரசேகரன் நியமனம்

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் அநீதியொழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவியாக திருமதி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் உயர்மட்ட அரசியல் குழு இன்று கொழும்பில் கூடி ஏகமனதாக இந்தத்தீர்மானத்தினை எடுத்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

இடம்பெயர்ந்த சிறார்களை பராமரிப்பதற்கான ஏற்பாடு

பராமரிப்புத் தேவைப்படும் சிறார்கள்இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்தவர்களுக்கான வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களில் உள்ள வலது குறைந்த மற்றும் பராமரிப்பு தேவைப்படுகின்ற குழந்தைகள் 500 பேரை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றிற்கு அனுப்பி பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

யோகராஜனும் சச்சிதானந்தமும் ஐ.தே.கவில் இணைகின்றனர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த உப தலைவரான ஆர். யோகராஜன் அவர்கள், அந்தக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்வதாக அறிவித்துள்ளார்.

தற்போது துணை அமைச்சராக இருக்கும் எம். சச்சிதானந்தமும் அவருடன் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்திருக்கிறார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1144 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.