சமுதாயத்தில் வாழும் தனிப்பட்ட ஒருவன் தனக்குச் சரி என்று பட்டதைச் செய்ய உரிமை உண்டா?
இந்தக் கேள்விக்கு விடை தருவது கடினம். எந்தத் தனிப்பட்ட மனிதனும் தான் வாழும் சமுதாயத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே வாழ வேண்டியுள்ளது. அப்படியானால், தனிமனிதன் ஒருவனின் உரிமை, சுதந்திரம் என்பதெல்லாம் எந்தளவுக்கு இருக்கலாம்? யார் அதைத் தீர்மானிப்பது?