குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2054

இன்று 2023, மார்கழி(சிலை) 11 ம் திகதி திங்கட் கிழமை .

கல்வி - அறிவியல்

அண்ட வெளியில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் நட்சத்திரம்! -ஏ.கே.கான்

 

புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து (Baby star) மாபெரும் அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவரான Robin Dunbar என்பவரின் தலைமையிலான குழுவினரே மேற்படி சுவாரஷ்யமான செய்தி

மூளையின் அளவே உங்களின் நண்பர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது! ஆய்வில் ஆச்சரியம் உங்களுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கின்றார்கள் என்பதனை உங்களின் மூளையின் அளவு தான் தீர்மானிக்கின்றது என்று சுவாரஷ்யமான ஆய்வு ஒன்று கூறுகின்றது.

மேலும் வாசிக்க...
 

இதோ நீங்கள் எதிர்பார்த்த தொழில் நுட்பம்வருகின்றது?

 15.02.2012-இன்று வரும் நாளை வரும் எனப் பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்ப சாதனமொன்று எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகுமென பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
அது வேறு எதுவும் அல்ல. அப்பிளின் ஐ பேட் 3.

மேலும் வாசிக்க...
 

தீக்கோழி தலையை மணலுக்குள் நுழைத்துக் கொள்ளும் என்பது உண்மையா?

13.02.2012-ஆபத்து வரும் போது தீக்கோழி மண லுக்குள் தன் தலையை நுழைத்துக் கொள்ளும் என்று கூறுவது உண் மையல்ல. எந்த  தீக்கோழியும் அவ்வாறு தலையை மணலுக்குள் நுழைத்துக் கொண் டதை எவரும் பார்த்த தில்லை.

மேலும் வாசிக்க...
 

விண்டோஸ் 8

 விண்டோஸ் 8
கம்ப்யூட்டர் வரலாற்றில், இனி புதிய திருப்பு முனையைக் கொண்டு வரும் என எதிர்பார்த்த விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், சென்ற செப்டம்பர் 13 அன்று, புரோகிராம் வடிவமைப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு ஆய்வாளர்கள் தகவல்!

28.11. 2011. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த விண்வெளி துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பூமியை போன்ற மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

எரிகல் பொழிவால் கிடைக்கும் தங்கம் மற்றும் பிளாட்டினம்

சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமி உருவாகும் பொழுது அதன் மய்யத்தில் உருகிய இரும்பு கூழ்கள் அதிகளவில் இணைந்து புவி மையத்தை தோற்றுவித்தன. இரும்புடன் தங்கம் மற்றும் பிளாட்டினம் உள்பட பல விலைமதிப்பற்ற தனிமங்களும் மய்யத்தில் சேர்ந்தன.

மேலும் வாசிக்க...
 

எழுத்துகள்

தமிழ் - 247
ஆங்கிலம் - 26
அரபி - 28
ஜெர்மன் - 26
துருக்கி - 26
லத்தின் - 22
பாரசீகம் - 31
ஸ்பானீஷ் - 27
பிரஞ்சு - 26
கிரேக்கம் - 24
இத்தாலி - 20
சமஸ்கிருதம் - 51

 

உடலுறவே இல்லாமல் குழந்தைகளைப் பெறலாம்! Digg Twitter RSS உடலுறவே இல்லாமல் குழந்தைகளைப் பெறலாம்!

20.08.2011-இந்த நூற்றாண்டிலேயே அறிவி யலில் பல அற்புத சாதனைகள் நிகழ்த்தப்பட இருக்கின்றன. மனி தனைக் குளோனிங் முறையில் உரு வாக்கி விடுவார்கள். அதாவது ஒரு மனித உடலிலிருந்து மற்றொரு மனி தனை உருவாக்கிட முடியும்.

மேலும் வாசிக்க...
 

முதலாம் உலகப்போரில் 3 கோடி மக்கள் மரணம்தரையிலிருந்து மின்னை உறிஞ்சி ஓடும் வாகனம் கண்டுபிடிப்பு

1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியில் தொடங்கி, 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி வரையிலான 1561 நாட்கள் முதலாம் உலகப் போர் நடந்தது. இதில் பன்னாட்டளவில் ஒரு  கோடி படை வீரர்களும், 2 கோடி பொது  மக்களும் இறந்தனர்.

தரையிலிருந்து மின்னை உறிஞ்சி ஓடும் வாகனம் கண்டுபிடிப்பு

தரைக்குக் கீழே பதிக்கப்பட்ட மின் கம்பிகளில் இருந்து மின்காந்த தூண்டு தல் மூலமாக மின்சாரத்தை உறிஞ்சி ஓடும் டிராம் வண்டி, தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தென் கொரிய தலைநகர் சியோலில் சியோல் கிராண்ட் பார்க் என்ற பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. மிகப் பெரிய ராட்டினம், ஓட்டல், நீச்சல் குளம் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. பூங்காவை சுற்றிப் பார்க்க டீசல் ரயில் இயக்கப்பட்டு வந்தது.

டீசலுக்கு பதிலாக நவீன தொழில் நுட்பத்தில் மின்சார ரயில் இயக்குவது குறித்து கொரியா அறிவியல், தொழில் நுட்பக் கழகம் ஆய்வு நடத்தியது. மின் காந்த தூண்டுதல் முறையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த தொழில் நுட்பத்தில் இயங்குவதற்கான வாகனங்கள் உருவாக்கும் பணி கடந்த ஆண்டு நிறைவடைந்தது.

இதற்கு ஆன்லைன் எலக்ட்ரிக் வீக்கிள் (ஓஎல்இவி) என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்த டிராம் வண்டிக்கு தண்டவாளம் தேவையில்லை. 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட இது கார் போலவே ஓடும். பூங்கா முழுவதும் டிராம் செல்லும் தடத்தில் அடையாளத் துக்காக நீல நிற கோடு போடப்பட்டி ருக்கும். இந்த கோட்டுக்கு நேராக, தரைக்கு கீழே சுமார் ஒரு அடி ஆழத்தில் மின்சார கம்பிகள் செல்லும்.

அந்த வழியாக செல்லும்போது, மின்காந்த தூண்டுதல் விசையைப் பயன்படுத்தி, மின்சாரத்தை வாகனம் நேரடியாக உறிஞ்சிக் கொள்ளும். இதன்மூலம் இன்ஜின் இயக்கப்படும்.

இதுபற்றி இன்ஜினீயர்கள் கூறுகையில், பாதாள மின்கம்பியானது உயர்அழுத்த மின் கம்பியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதனால், மின்சாரம் எப்போதும் தடை படாது. மின்காந்த தூண்டுதல் முறையில் மின்சாரம் உறிஞ்சப்படுவதால் மின்இழப்பு அவ்வளவாக இருக்காது. சொற்ப அளவே புகை வெளியாகும் என்பதால் சுற்றுச் சூழலுக்கு ஏற்றது என்கின்றனர்.

பூங்காவில் இந்த வாகனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின் டாப் 50 கண்டுபிடிப்புகளில் ஓஎல்இவி ஒன்று என்று டைம்ஸ் இதழ் கவுரவப்படுத்தி விருது அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

 
பக்கம் 11 - மொத்தம் 12 இல்