அடுத்த 3 மாதங்களுக்கு பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் தயாராக இருப்பது நல்லது. இப்படி ஒரு கால நிலை கடந்த 30 வருடங்களில் வந்தது இல்லை என்று காலநிலை அவதானிகள் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் குறிப்பிடுவது குளிரை அல்ல. கடும் மழை மற்றும் காற்றைத்தான். இந்த வாரம் முதல் இனி 3 மாதங்களுக்கு (அதாவது பெப்ரவரி மாதம் வரை) கடும் மழையும் , புயல் காற்றும் வீசும் அபாயம் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பிரிட்டனில் உள்ள தாழ்வான இடங்களில் மழைவெள்ளம் தேங்கி நின்று, பெரும் பிரச்சனைகளை உருவாக்க உள்ளது. நீங்கள் வீதியில் உங்கள் கார்களில் செல்லும்போது, வெள்ளம் காணப்பட்டால் அதனை சாதாரணமாக எண்ணவேண்டாம். ஏன் எனில் நீங்கள் நினைப்பதை விட அது ஆளமாக இருக்கலாம்.