குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

பல்சுவை

குட்டி கதை நரியின் சூழ்ச்சியில் சிக்கிய மான் | சிந்தித்து செயல்படு!

ஒரு காட்டில் நன்கு அடர்ந்த வளர்ந்திருந்தது ஒரு ஆலமரம். அந்த ஆலமரத்தில், அளவுக்கு அதிகமான விழுதுகள் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தப் பக்கமாக ஒரு நரி சென்று கொண்டிருந்தது. அன்றைய தினம் ஒரு இரையும் அதற்கு கிடைக்கவில்லை.

மேலும் வாசிக்க...
 

தகுதியறிந்து மோத வேண்டும் குட்டிகதை !!

ஓர் மலை சூழ் அடர்ந்த கானகத்தில் ஒரு காட்டு பூனை தன் வழியே நடந்து சென்று கொண்டிருந்தது. மிகவும் பருத்து புலி போன்ற வரிகளுடன் உரோமங்கள் அடர்ந்து காணப்பட்ட அது தான் புலியின் இனம் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டது. தனது மீசையை முன்னங்கால்களால் நீவி விட்டுக் கொண்டு சுற்றும் முற்றும் பெருமையுடன் பார்த்தது. அதைக்கண்டு சிறிய பறவையினங்கள் “கீச்கீச்” என்று கத்திக் கொண்டு ஓடியதும் அதன் கர்வம் அதிகமானது.

மேலும் வாசிக்க...
 

பிச்சைக்காரனின் புலம்பல்!

சந்தனபுரி என்ற ஊரில் வணிகர் ஒருவர் இருந்தார். நேர்மையான வியாபாரி. கொள்முதல் செய்த விலையை விட சற்று கூடுதலான விலைக்கு பொருட்களை விற்று, அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவியும், தான தர்மங்களும் செய்து வந்தார்.

மேலும் வாசிக்க...
 

ஏமாற்றாதே! ஏமாறாதே! குட்டி கதை !!

செல்வன் ஒருவன் தன் பணப்பையை எங்கோ தொலைத்துவிட்டான். அதில் நூறு பொற்காசுகள் இருந்தன.என் பணப்பையைக் காணவில்லை! அதை கண்டுபிடித்து தருபவருக்கு பத்து பொற்காசுகள் தரப்படும் என்று ஊரெங்கும் தெரியப்படுத்தினான்.

மேலும் வாசிக்க...
 

சுதர்சன சக்கரத்தை நாராயணன் யாரிடம் இருந்து பெற்றார்?

சுதர்சனச் சக்கரம் என்றால் சட்டென நம் நினைவுக்கு வருபவர் ஸ்ரீமந் நாராயணன்தான். தன் நான்கு கரங்களிலும் முறையே சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஆகியவற்றைத் தாங்கியிருப்பவர் திருமால். தனது சுதர்சனச் சக்கரத்தால் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியவர். அவரின் திருக்கரத்தில் உள்ள சுதர்சனம், பக்தர்களை தீமைகளில் இருந்து காக்கவல்லது. அந்த சுதர்சனம் எப்போது எங்கே தோன்றியது?

மேலும் வாசிக்க...
 

வேந்தராக இருந்தாலும் மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள்

மாமன்னர் அக்பர் தன் நாட்டின் நடப்பு நிலை எப்படி இருக்கிறது என்று தனது ஒற்றர்களின் மூலம் அறிந்து கொள்வது வழக்கம். இருப்பினும் ஒருநாள் தன் நாட்டு மக்கள் தம்மைப்பற்றி என்ன நினைக்கின்றார்கள். என்பதை தாமே நேரில் அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது.

மேலும் வாசிக்க...
 

முட்டாள்களிடம் எப்படி பேசுவது? – அக்பர் பீர்பால் கதை

அக்பர் ஒரு நாஷ் பீர்பாலிடம் பேசித் கொண்டிருக்கும் போது ஒரு புதுமையான கேள்வி ஒன்று எழுந்தது.உடனே பீர்பாலிடம் முட்டாள்களிடம் எப்படி பேசுவது? என்று அக்பர் கேட்டார்.

மேலும் வாசிக்க...
 

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா?

``கடவுள் ஏன் அவர் இருப்பதை வெளிப்படுத்துவதில்லை?'' சீடன் கேட்டான்.

குரு ஒரு கதை சொன்னார்:

மேலும் வாசிக்க...
 

திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும்,5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார்.

அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.

மேலும் வாசிக்க...
 

தெனாலி ராமன் - காளியிடம் வரம் பெற்ற கதை

சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். தெனாலி ராமனுக்குப் பள்ளி சென்று படிப்பது என்பது வேப்பங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும் அறிவுக்கூர்மையும் நகைச் சுவையாகப் பேசக்கூடிய திறனும் இயற்கையாகவே பெற்றிருந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை தெனாலி ராமனுக்கு ஏற்பட்டது. அதனால் என்ன செய்வது என்ற கவலை அவனை வாட்டியது.

 

மேலும் வாசிக்க...
 
பக்கம் 2 - மொத்தம் 3 இல்