371. |
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. |
372. |
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை. |
373. |
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும். |
374. |
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. |
375. |
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. |
376. |
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம. |
377. |
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. |
378. |
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின். |
379. |
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன். |
380. |
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். |