361. |
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து. |
362. |
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். |
363. |
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல். |
364. |
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். |
365. |
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர். |
366. |
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. |
367. |
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும். |
368. |
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும். |
369. |
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின். |
370. |
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். |