குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுவிசில் ஈழத்தமிழரவையால் நடத்தப்பட்ட கறுப்புஆடி!

சுவிசு ஈழத்தமிழரவை மற்றும் சுவிசு தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸின்  பேர்ன் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள   Waisenhausplatz என்னுமிடத்தில்28.07.2011- 28 ஆம் ஆண்டு கறுப்பு ஆடி நினைவுகூரப்பட்டது நேற்று பிற்பகல் 15.00 மணிக்கு கறுப்புஆடி நினைவுகூரல் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டு நிகழ்வு  தொடர்ந்தது.

சுவிசு ஈழத்தமிழரவையின் பிரதிநிதிகள், சுவிசு தமிழ் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சமூக உணர்வாளர்களின் நினைவுரைகள் இடம்பெற்றன. நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதுடன் இன்றைய தாயகத்தின் நிலைமைகளை விளக்கி துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. பார்வையாளர்களாக சமூகமளித்த பல்லின  மக்கள் ஒவியங்களைப் பார்வையிட்டதுடன் எம்முறவுகள் படும் துயர்களை அறிந்து சென்றனர்

இறுதியாக வலிகளிலிருந்து ‘மீள் எழுச்சி கொள்வோம’; என்ற உறுதிமொழியுடன் தாரக மந்திரம் உரைக்கப்பட்டு கறுப்பு ஆடி நிகழ்வு நிறைவடைந்தது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.