நேற்று புதன்கிழமை மாலை திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது இதனைத்தெரிவித்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை மற்றும் சேருவில பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தல்களில் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் மற்றும் வேட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
கலந்துரையாடலுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தலைமை வகித்தார்.
அப்போது இன்றைய அரசியல் நிலவரம் பற்றி சம்பந்தன் பேசினார்.
‘வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தங்களின் பாரம்பரிய தாயகத்தின் இறைமை மற்றும் ஆட்சி அதிகாரம் ஆகியன தங்களிடமே இருக்க வேண்டும் என்பதை உள்ளுராட்சித்தேர்தலில் தெட்டத்தெளிவாக இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தங்களின் பாரம்பரிய தாயகத்தில் தங்களுக்குத் தாங்களே எஜமானர்களாக இருக்க வேண்டும் என்பதை தேர்தல் மூலம் நிலைநாட்டியுள்ளனர். என்றுமே இல்லாத வகையில் ஐநா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய யூனியன் உட்பட சர்வதேச சமூகம் இலங்கை பல்லின நாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட லேண்டும் என்றும் அங்கு தமிழ் மக்கள் சம உரிமை பெற்று வாழ்வதற்கு உரித்துடையவர்கள், அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாகக்கூறியுள்ளன.
தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தமிழத்தேசியக்கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றைக் காணவேண்டும் என்று சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
அந்த அழுத்தம் காரணமாக எம்முடன் பேச்சுவார்த்தையை அரசாங்கம் நடத்தி வருகின்றது.
கூட்டமைப்பு ஏற்கும் எந்த அரசியல் தீர்வையும் தாம் ஏற்கத்தயார் என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்திருக்கின்றது. இதே நிலைப்பாட்டை ஏனைய அரசியல் கட்சிகளும் எடுக்கப்போகின்றன என்று சம்பந்தன் தெரிவித்தார்.