குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

தெருவிளக்கிற்கு அண்ணாவும் தம்பியும் மந்திரிகளும் தெருத்தெருவாய் அலைந்ததேன்.

 28.07.2011--தெருவிளக்குகளைப் பொருத்துவதற்கான ஆணையே கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது – பசில் ராயபக்ச தெருவிளக்கிற்கு அண்ணாவும் தம்பியும் மந்திரிகளும் தெருத்தெருவாய் அலைந்ததேன். உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியை தமிழ் மக்களின் ஆணை என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராயபக்ச கூறியுள்ளார்.

பிரதேசசபைத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் ஆணை குறித்துப் பேசுகிறது. ஆனால் சிறிலங்கா அதிபருக்கு முழு நாடுமே ஆணையை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் உண்மையில் தெருவிளக்குகளை பொருத்துவதற்கும், குடிநீர் குழாய்களை அமைப்பதற்கும் தான் அதிகாரம் கொண்டது.அதற்கே கூட்டமைப்புக்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் படி மக்களின் ஆணை என்பது கருத்து வாக்கெடுப்பு மூலமோ அல்லது அதிபர் தேர்தல் மூலமோ, நாடாளுமன்றத் தேர்தல் மூலமோ தான் பெறப்பட வேண்டும் என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்தவர்களின் நிலை குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரியும், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்தபோது கவலை வெளியிட்டுள்ளது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள பசில் ராஜபக்ச, அவர்கள் நட்பு ரீதியாக கவலையை வெளியிட்டிருந்தால், அதை வரவேற்பதாக கூறியுள்ளார்.

ஆனால் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினையை அமெரிக்கா முதலில் தீர்க்க வேண்டும் என்றும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவை விட தமிழ்நாட்டில் வறுமைநிலை மோசமாக உள்ளதை தான் அறிவேன் என்று கூறியுள்ள அவர், சிறிலங்காவில் இடம்பெயர்ந்தவர்கள் பற்றி கவலைப்பட முன்னர் ஜெயல்லிதா தமிழ்நாட்டில் வறுமை நிலையில் உள்ளவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர்களின் எந்தவொரு கரிசனையும் எமது நல்லிணக்க முயற்சிகளுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று பசில் ராஜபக்ச திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் குழுவில் சிறிலங்காவுக்கான உதவிகளை தடைசெய்யக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், தனது கவலை பொருளாரதார அளவீட்டில் இல்லை என்றும், இது தனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு தகவல் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா இதனை நடைமுறைப்படுத்தும் என்று தான் நினைக்கவில்லை என்றும், முன்னர் ஜிஎஸ்ரி பிளஸ் சலுகையை காட்டி அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும், அதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அரசியலில் புதிதாக நுழைந்தவர்களே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்

யாழ். மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் அரசியலுக்குப் புதிதாக நுழைந்தவர்களே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

 

இவர்களே குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளின் முதல்வர் பதவிக்கு நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வலிகாகம் கிழக்கு பிரதேசசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அன்னலிங்கம் உதயகுமார் 3772 வாக்குகளைப் பெற்று முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

 

இவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தனிப்பட்ட செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சாவகச்சேரி பிரதேசசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சிற்றம்பலம் துரைராசா 6520 வாக்குகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

சாவகச்சேரி நகரசபைத்  தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் இறப்பியேல் தேவசகாயம்பிள்ளை 1808 வாக்குகளுடன் முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.

 

இங்கு முன்னர் சபை முதல்வராக இருந்த சாள்ஸ் எனப்படும் ஈபிடிபியின் சூசைமுத்து அலெக்சான்டர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள போதும் அவருக்கு 540 விருப்பு வாக்குகளே கிடைத்துள்ளன.

 

வல்வெட்டித்துறை நகரசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நடராசா அனந்தராஜ் 1436 வாக்குகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

 

இங்கு போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நகர முதல்வருமான சிவாஜிலிங்கம் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.

 

தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகரான எவ்.எக்ஸ் குலநாயகம் ஆறாவது உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

 

பருத்தித்துறை பிரதேசசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பூபாலசிங்கம் சஞ்சீவன் 3486 வாக்குகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிட்ட பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவர் சிறிரங்கேஸ்வரனுக்கு 2134 வாக்குகளே கிடைத்துள்ளன.

 

காரைநகர் பிரதேச்சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் வேலாயுதம் ஆனைமுகன் 1540 வாக்குகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் ஊர்காவற்றுறை பிரதேசசபைக்குப் போட்டியிட்ட மருதையினார் ஜெயகாந்தன் 2663 வாக்குகளுடனும், நெடுந்தீவு பிரதேச்சபைக்குப் போட்டியிட்ட தானியெல் றெக்சியன் 999 வாக்குகளுடனும், வேலணை பிரதேசசபைக்குப் போட்டியிட்ட சின்னையா சிவராசா 2538 வாக்குகளுடனும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

 

வேலணை பிரதேசசபைக்குப் போட்டியிட்ட அதன் முன்னாள் தலைவர் கருணாகரகுருமூர்த்தி இம்முறை மூன்றாவது உறுப்பினராகவே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலிகாமம் மேற்கு பிரதேசசபைக்குப் போட்டியிட்ட ஐங்கரன் நாகரஞ்சினி 5008 வாக்குகளுடனும், வலிகாமம் வடக்கு பிரதேச்சபைக்குப் போட்டியிட்ட சோமசுந்தரம் சுகிர்தன் 3238 வாக்குகளுடனும், வலிகாமம் தெற்குமேற்கு பிரதேசசபைக்குப் போட்டியிட்ட ஜெபநேசன் அந்தோனிப்பிள்ளை 2809 வாக்குகளுடனும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

 

வலிகாமம் தெற்குமேற்கு பிரதேசசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிய்ன பட்டியலில் போட்டியிட்ட அதன் முன்னாள் தலைவர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் 2707 வாக்குகளை பெற்றுள்ளார்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலிகாமம் தெற்கு பிரதேச்சபைக்கு போட்டியிட்ட தியாகராசா பிரகாஸ் 2811 வாக்குகளுடனும்,வடமராட்சிதெற்கு மேற்கு பிரதேசசபைக்குப் போட்டியிட்ட பொன்னையா வியாகேசு 3962 வாக்குகளுடனும்,நல்லூர் பிரதேசசபைக்குப் போட்டியிட்ட  பரமலிங்கம் வசந்தகுமார்3483 வாக்குகளுடனும், பருத்தித்துறை நகரசபைக்குப் போட்டியிட்ட சட்டவாளர் சபாநாயகம் ரவீந்திரன் 1976 வாக்குகளுடனும் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

இது பற்றிய விபரப்பட்டியல்:

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 23ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரமும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரமும் தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் விபரங்கள் அடுத்தவாரம் வர்த்தமானி மூலம் வெளியிடப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் தேரதல் நடைபெற்ற 16 உள்ளூராட்சி சபைக்கும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரங்கள் வருமாறு.

1.வலிகாமம் கிழக்கு பிரதேசசபை

இலங்கை தமிழரசுக்கட்சி

1.அன்னலிங்கம் உதயகுமார் -3772
2 கந்தையா தர்மலிங்கம் – 3673
3. தம்பிராசா திருநாவுக்கரசு-2419
4. இராமலிங்கம் கந்தசாமி- 2364
5. நவரெத்தினம் ரூபதாஸ் -2361
6. தர்மலிங்கம் கிருஸ்ணராசா-2054
7. கந்தையா துரைராசா-1724
8. தம்பு ரவீந்திரன்-1668
9. கந்தையா நாகரத்தினம்-1564
10. வைரமுத்து சுப்பிரமணியம்-1444
11. கணபதிப்பிள்ளை துரைசிங்கம்-1382
12. முருகுப்பிள்ளை பகீரதன்-1342
13. ராஜா பிறேம்குமார்-1025
14. சுந்தரம் செல்வரத்தினம்-1021
15. தம்பிப்பிள்ளை நித்தியானந்தம் –787
16. ஞானசேகரம் தர்மலிங்கம் ஞானசேகரவேல்- 668

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1. இராமநாதன் ஐங்கரன்- 2135
2. நாகமணி இராசநாயகம்-958
3. கிருஸ்ணபிள்ளை செல்வராசா-804
4. ஆசைப்பிள்ளை வசீந்திரன்-754
5. கதிர்காமு சந்திரபோஸ்-732

2.சாவகச்சேரி பிரதேசசபை

இலங்கை தமிழரசுக் கட்சி

1.சிற்றம்பலம் துரைராசா-6520
2.கணபதிப்பிள்ளை யோகராசா-2019
3.ஜெகரத்தினம் சிற்சபாநாதன்- 1682
4.சின்னப்பொடியன் இரத்தினசிங்கம்-1672
5.வேலன் கந்தையா-1611
6.இராசையா தெய்வேந்திரம்பிள்ளை-1521
7.கந்தையா அசோகலிங்கம்- 1349
8.யேசுதாசன் அருள்நேசன்- 1327
9.இராசேந்திரம் ஜானகி- 1212
10.விஜயரத்தினம் எட்வின் டானியல்- 1131
11.இராசையா மதீஸ்வரன்-1090

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.அழகையா டயஸ் இம்மானுவெல்-712
2.சதாசிவம் ஞானலிங்கம்-682

ஐக்கிய தேசியக் கட்சி

1.அமிர்தலிங்கம் சதாசிவம் -941

3.சாவகச்சேரி நகரசபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி

1.இறப்பியேல் தேவசகாயம்பிள்ளை- 1808
2.குமாரசாமி சதாசிவமூர்த்தி- 1311
3.கந்தையா மயில்வாகனம்- 1104
4.அருணாசலம் பாலமயூரன்-1103
5.காசிலிங்கம் சற்குணதேவன்- 964
6.பொன்னுத்துரை செல்வரத்தினம்- 763
7.ஞானப்பிரகாசம் கிசோர்- 749
8.பரமசாமி சிறிதரன்-690
9.தனபாலசிங்கம் சுதர்சன்- 454

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.சூசைமுத்து அலெக்சான்டர்- 540
2.நடராசா திருக்குமரன்-425

4.வல்வெட்டித்துறை நகரசபை

இலங்கை தமிழரசுக் கட்சி

1.நடராசா அனந்தராஜ்-1436
2.கனகலிங்கம் சிவாஜிலிங்கம்-1165
3.கந்தசாமி சதீஸ்-771
4.மகாலிங்கம் மயூரன்-758
5.தில்லையம்பதி ஜெகதீஸ்-654
6.சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம்-458
7.கனகராஜா ஜெயராஜா-399

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.பொன்னுத்துரை தெய்வேந்திரன்-457
2.இந்திரன் கைலாயினி-199

5.பருத்தித்துறை பிரதேசசபை

இலங்கை தமிழரசுக் கட்சி

1.பூபாலசிங்கம் சஞ்சீவன் -3486
2.மாணிக்கம் லோகசிங்கம்-3456
3.கதிரவேலு தவயோகநாதன்-2621
4.பொன்னையா திருச்செல்வம்- 2168
5.நிரஞ்சன் கிருசாந்தி- 1727
6.குமாரசிவம்ஐயர் பன்னீர்ச்செல்வம்-1178
7.இராசதுரை சிவசுப்பிரமணியம்- 1768

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன்- 2134
2.தம்பிராசா மணீதரன்-620

6.காரைநகர் பிரதேசசபை

இலங்கை தமிழரசுக் கட்சி

1.வேலாயுதம் ஆனைமுகன்-1540
2.சந்திரசேகரம் துர்க்கேஸ்வரன்- 709
3.சுப்பிரமணியம் யோகேஸ்வரன்- 376

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.வீரமுத்து கண்ணன்-1398

ஐக்கிய தேசியக் கட்சி

1.பாலச்சந்திரன் கணேசபிள்ளை-1290

7.ஊர்காவற்றுறை பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.மருதையினார் ஜெயகாந்தன்-2663
2.பரமலிங்கம் அருள்கரன்-1067
3.கந்தஞானி கதீசன்-984
4.மனுவெல் பெர்னான்டோ பெலிக்ஸ் கல்பேட்-949

இலங்கை தமிழரசுக் கட்சி

1.இராமலிங்கம் புவனேஸ்வரன்-375

8.நெடுந்தீவு பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.தானியேல் றெச்சியன்-999
2.சுப்பிரமணியம் கோபாலசிங்கம்-631
3.செபஸ்தி பேதுரு அருளப்பு- 627
4.மரிய செபஸ்தியாம்பிள்ளை அமலடொறின்-376
5.சின்னப்பு எட்வேட் ராசா-355
6.குமாரசாமி சிவானந்தன்-346
7.ஐயாக்குட்டி மயில்வாகனம்-261
8.லயிதாஸ் யோகராசா லோறன்ஸ் -210

இலங்கை தமிழரசுக் கட்சி

1.அப்புக்குட்டி அந்தோனிப்பிள்ளை-88

9.வேலணை பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.சின்னையா சிவராசா-2538
2.சின்னத்தம்பி கார்த்திகேசன்- 1094
3.நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி-717
4.பரமானந்தன் தயானந்தன்-715
5.சோதிலிங்கம் கோபிலக்சன்-660
6.ஜெயநாயகம் ஜெயரஞ்சன்-634
7.பாலசிங்கம் தவபாலன்-615
8.சித்திரவடிவேல் ரவின்சன்-568

இலங்கை தமிழரசுக் கட்சி

1.குணரத்தினம் சிவகுலசிங்கம்-1430
2.முருகேசு சிவராசா-769
3.கந்தையா கனகரத்தினம்-677

10.வலிகாமம் மேற்கு பிரதேசசபை

இலங்கை தமிழரசுக் கட்சி

1.ஐங்கரன் நாகரஞ்சினி-5008
2.நவரத்தினம் சிவரஞ்சன்-3103
3.தர்மலிங்கம் நடனேந்திரன்-2586
4.வீரசிங்கம் சிவகுமார்-2180
5.சரவணமுத்து கனகராசன்-1818
6.கந்தையா ஐயலிங்கம்-1747
7.பொன்னுச்சாமி காங்கேயநாதன்-1660
8.தம்பிராசா சசிதரன்-1113
9.நடராசா பிரான்சிஸ் ராஜகுமார்-1103
10.கணேசரத்தினம் சபாநாயகம்-1036
11.சண்முகம்பிள்ளை இராசதுரை-835

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.சிவகுரு பாலகிருஸ்ணன்-808
2.செல்வராசா சிறிதரன்-666
3.செல்லமுத்து செல்லக்குமார்-592

11.வலிகாமம் வடக்கு பிரதேசசபை

இலங்கை தமிழரசுக் கட்சி

1.சோமசுந்தரம் சுகிர்தன்-3238
2.சண்முகலிங்கம் சஜீவன்-2565
3.அன்னபரிபூரணம் ஞானேஸ்வரன்-2447
4.செல்வத்துரை செல்வராசா-1655
5.பொன்னுத்துரை தங்கராசா- 1459
6.நடராசா மதியழகராசா-1284
7.கந்தசாமி மயூரதன்-1258
8.வேலும்மயிலும் சண்முகநாதன்-1186
9.செல்லத்துரை கமலநாதன்-1172
10.தம்பிப்பிள்ளை நடராசா-1157
11.மாரிமுத்து கதிரமலைப்பிள்ளை-1116
12.சிவபாலசுந்தரம் ஹரிகரன்-981
13.சானை தங்கராசா-947
14.மயில்வாகனம் சிவகுமாரன்-880
15.வைரவன் முருகேசு-820

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.இராசரத்தினம் ஜெயபாலசிங்கம்- 1863
2.செல்லப்பா திருஞானம்-993
3.பசுபதி உதயகுமார்-800
4.சுப்பிரமணியம் மணிராசா-798
5.பசுபதி மதனராஜ்-627
6.முருகன் ஐயாத்துரை-535

12.வலிகாமம் தெற்குமேற்கு பிரதேசசபை

இலங்கை தமிழரசுக் கட்சி

1.ஜெபநேசன் அந்தோனிப்பிள்ளை-2809
2.சண்முகம் சிவகுமாரன்-2337
3.ஆறுமுகம் சின்னையா கணேசவேல்-2314
4.விநாயகமூர்த்தி சுப்பிரமணியம்-2226
5.சின்னத்தம்பி மகேந்திரன்-2120
6.கௌரிகாந்தன் கதிரவேலு-2045
7.சுப்பையா பரமகுரு-1672
8.செல்லப்பா சிவபாதம்-1491
9.அருட்குமார் ஜோன் ஜப்றிக்கோ-1427
10.தங்கராசா குமணன்-1121
11.கனகரத்தினம் பொன்னன்-1116
12.மரியநாயகம் சூசைப்பிள்ளை-1046

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன்-2707
2.செல்வரட்ணம் யேசுதாசன் செல்வராசா- 693
3.கந்தையா நடராசா-605
4.பாலசுப்பிரமணியம் நாகேந்திரன்-454

13.வலிகாமம் தெற்கு பிரதேசசபை

இலங்கை தமிழரசுக் கட்சி

1.தியாகராசா பிரகாஸ்-2811
2.இராசையா பரமேஸ்வரலிங்கம்-2676
3.அன்னதானம் றிச்சாட் நவப்பிரகாசம்- 2474
4.செல்வரத்தினம் உதயகுமாரன்-2163
5.நாகேந்திரம் லட்சுமிகாந்தன்-1852
6.இராமலிங்கம் இராசதுரை-1525
7.இராசா குமாரசாமி-1499
8.கதிரவேல் கருணைநாயகம்-1495
9.அருளப்பு வில்லியம் யேசுதாசன்-1479
10.வசந்தநாதன் சிவநாதன்-1406
11.முத்துலிங்கம் நவலோகராசா-1396
12.சந்திரசேகரம் சந்திரகுமார்-1208
13.ஈஸ்வரன் செல்லத்துரை-1056

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.இரத்தினசிங்கம் கரிகரன்-1336
2.கிருஸ்ணபிள்ளை இராஜசேகரம்-754
3.தம்பிப்பிள்ளை-தேவராஜன்-673

14.வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை

இலங்கை தமிழரசுக் கட்சி

1.பொன்னையா வியாகேசு-3962
2.இளையதம்பி சாந்தசொரூபன்-3026
3.பொன்னம்பலம் குகதாஸ்-3021
4.கந்தன் இரத்தினம்-2537
5.கந்தன் பரஞ்சோதி-1923
6.பொன்னையா கணேஸ்-1791
7.பொன்னன் தம்பிமுத்து-1709
8.ஆழ்வாப்பிள்ளை மதியரசன்-1694
9.நடராசா கந்தசாமி- 1245
10.சீவரத்தினம் இரத்தினேஸ்வரன்-1220
11.ஏரம்பு இராசையா-1061
12.முத்தையா ஜெகநாதன்-1012
13.கனகரத்தினம் பாலசுப்பிரமணியம்-776
14 சேதுலிங்கம் பாலிராஜ்-623

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.அருணாசலம் சந்திரசேகரம்-829
2.துரை பிரதீபன்-509
3.சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை-466

15.நல்லூர் பிரதேசசபை

இலங்கை தமிழரசுக் கட்சி

1.பரமலிங்கம் வசந்தகுமார்-3483
2.கோமதி ரவிதாஸ்-2910
3.பெரியதம்பி கனகசபாபதிப்பிள்ளை-2759
4.இராசையா இராசலிங்கம்-2689
5.கிட்ணர் தர்மரட்ணம்-2241
6.ஜேசுதாசன் யோனிஸ்வரன்-2016
7.நாகன் சிவலோகநாதன்-1792
8.தம்பிமுத்து துரைமணி-1322
9.சிவராசா கஜேந்திரன்- 1124
10.சண்முகலிங்கம் சுரேஸ்குமார்-1052

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.அம்பலம் ரவீந்திரதாசன்- 950
2.வல்லிபுரம் சிறிகணேசா-575

16.பருத்தித்துறை நகரசபை

இலங்கை தமிழரசுக் கட்சி

1.சபாநாயகம் ரவிந்திரன்-1976
2.சிதம்பரப்பிள்ளை பத்மநாதன்-1477
3.நடராசா நிரஞ்சன்-1390
4.சிவகுமார் தீபானந்-798
5.மதனி நெல்சன்-654
6.அருளம்பலம் அருள்நாதன்-385
7.இராமசாமி குலசேகரம்-342

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.சிவயோகநாதன் முகுந்தன்-562
2.சிவக்கொழுந்து மகேந்திரன்-511
 

 

கொள்ளையிடப்பட்ட 12கோடி பெறுமதியான நகைகள் பிள்ளையான் குழுவிடமிருந்து மீட்பு � பிள்ளையான் கைதாகலாம்?
மட்டக்களப்பு புதூர் மக்கள் வங்கியில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 12 கோடி ரூபா பெறுமதியான நகைகள் கல்கிசை மற்றும் மட்டக்களப்பு பகுதி வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரகசிய காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

புதூர் மக்கள் வங்கியில் அண்மையில் 15 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளும் 35 லட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டன. இவற்றில் 12 கோடி ரூபா தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி 3கோடி ரூபா பெறுமதியான தங்கநகைகள் மற்றும் பணத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வங்கிக் கொள்ளை தொடர்பாக மட்டக்களப்பைச் சேர்ந்த பிள்ளையான் குழவைச்சேர்ந்த ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 12 கோடி ரூபா பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

கைதான பெண் கல்கிசையிலும், தெஹிவளையிலும் இரு வீடுகளை வாடகைக்குப் பெற்றிருந்தார். அந்த இரு வீடுகளிலும் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. இதன் பின்னர் மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கோடி பெறுமதியான 10 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

வென்னப்புவ பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட இந்த வங்கிக் கொள்ளையை மேற்கொண்ட பிள்ளையான்குழுவின் முக்கிய நபராக கருதப்படும் பிரதீபன் என்பவரிடம் பெறப்பட்ட தகவல்களை அடுத்தே இந்த பெண் கைது செய்யப்பட்டார் என மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தப் பெண் கைது செய்யப்படுவதற்கு முன்னர் வங்கியின் அலுவலக உதவியாளர் ஒருவரின் ஒத்துழைப்புடன் கொள்ளையில் நேரடியாக பங்கேற்றதாக கருதப்படும் பிள்ளையான் குழுவைச்சேர்ந்த பிரதீபன், கண்ணன் ஆகியோர் கைதாகியிருந்தனர். இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு இரகசியப் காவல்துறை பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த கொள்ளையை பிரதீபனும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சந்திகாந்தனும் இணைந்தே திட்டமிட்டு செயற்படுத்தியிருந்தனர் என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக மட்டக்களப்பு இரகசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் பிள்ளையானை கைது செய்வதற்கான அனுமதியை தாம் காவல்துறை உயர்மட்டத்திடம் கோரியிருப்பதாகவும் மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.