குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

இரண்டு கவர்ச்சி குலுக்கல் நடிகைகளின் சண்டை!

27.07.2011--  யார் இந்த சோனா? நான் பதில் சொல்லும் அளவுக்கு இவர் ஒரு நடிகையே அல்ல. நான் எதற்காக இவரிடம் பேச வேண்டும்? முதலில் அவருக்கு அடிப்படை நாகரீகம், மரியாதை ஏதாவது தெரிகிறதா? என்று சோனாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் நடிகை நமீதா. கோ படத்தில் நடிகை நமீதா போன்ற கேரக்டரில், சோனா நடித்து இருந்தார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே முட்டல், மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நமீதாவை தான் தொடர்பு கொண்டு பேசியதாகவும், எஸ்.எம்.எஸ்., அனுப்பியதாகவும், ஆனால் அவர் சரியாக பதில் சொல்லவில்லை என்று பத்திரிகைகளில் சோனா பேட்டி கொடுத்து இருந்தார்.

 இதை பார்த்ததும் நடிகை நமீதா கொந்தளித்து விட்டார். என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடிக் கொள்ளும் வேலையில் இறங்கியுள்ளார். இவரது இந்த செயலுக்கு எனது அங்கீகாரத்தை வேறு அவர் எதிர்ப்பார்க்கிறார். இது கடைந்தெடுத்த முட்டாள்தனம், என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :

 இந்த ஆண்டு மட்டுமே இதுவரை ஐந்தாறு படங்களில் நான் நடிக்காமலேயே, என் பெயர், போஸ்டர் அல்லது ரசிகர் மன்றம் என என்னைச் சம்பந்தப்படுத்தி காட்சிகளை வைத்துள்ளனர். என்னைப் போன்ற பிரபல நடிகைகளுக்கு நேரும் வழக்கமான சங்கடம் இது என்பதை நான் புரிந்து கொண்டு இத்தனை நாள் அமைதி காத்தேன்.

 அதற்காக இதுவரை யாரையும் குற்றம் சொன்னதில்லை. ஆனால் இப்போது நடிகை சோனா என் பெயரைப் பயன்படுத்தி செய்து வரும் செயல் அநாகரீகமானது. சமீப காலமாக என்னை இமிடேட் செய்வது போலவும், கிண்டலடிப்பது போலவும் சில படங்களில் நடித்து வருகிறார் சோனா.

 நானும் போனால் போகட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன். ஆனால் ஆங்கில நாளிதழ் ஒன்றில், நமீதாவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேன். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. என்னை அவர் பாராட்டவில்லை என்றெல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். இதற்கு முன்பும் கூட சில பத்திரிகைகளில் அவர் இப்படிச் சொன்னதாக தெரியவந்துள்ளது.

 முதலில் இவர் என் நம்பருக்குத்தான் எஸ்எம்எஸ் அனுப்பினாரா என்று பார்க்கட்டும். அதுபோன்ற எஸ்எம்எஸ் எதுவும் எனக்கு அவரிடமிருந்து வந்ததில்லை. யார் இந்த சோனா? நான் பதில் சொல்லும் அளவுக்கு இவர் ஒரு நடிகையே அல்ல. நான் எதற்காக இவரிடம் பேச வேண்டும்? முதலில் அவருக்கு அடிப்படை நாகரீகம், மரியாதை ஏதாவது தெரிகிறதா?

 தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான என்னை கொச்சைப்படுத்தும் விதத்தில் கோ படத்தில் கேவலமான காட்சியில் நடித்ததற்காக அவரல்லவா வெட்கப்பட வேண்டும்? உண்மையிலேயே இவருக்கு என் மீது மரியாதை இருந்தால், இப்படி ஒரு காட்சியில் நடிக்கச் சொன்னபோதே கோ பட இயக்குநர் கே.வி.ஆனந்திடம் இவர் மறுத்திருக்க வேண்டும் அல்லவா?

அந்தப் படத்தில் வருவதுபோல நான் எந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தேன்...? எந்த அரசியல் கட்சிக்காவது ஆதரவு காட்டினேனா...? அப்படியிருக்கும்போது, என்னை எப்படி இந்த மாதிரி இழிவுபடுத்தலாம்? என்னைப் பற்றி இதற்கு முன் எத்தனையோ படங்களில் காட்சி வைத்துள்ளனர்.

 அந்தப் படங்களின் இயக்குநர்கள் அல்லது சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் யாரிடமும் நான் அதுபற்றி பேசியது கூட இல்லை. அந்த அளவு நான் உண்டு என் வேலை உண்டு என அமைதியாக இருக்கும் என்னை தேவையில்லாமல் சீண்டுவது ஏன்? ஆனால் சோனாவின் செயல், இந்த முறை என் பொறுமையை சோதித்துவிட்டது. இத்தனை தவறுகளை, தனிமனித தாக்குதலை செய்துள்ள சோனா மீது நான்தான் கோபப்பட வேண்டும்.

 இந்த லட்சணத்தில் நான் அவர் எஸ்.எம்.எஸ்., க்கு பதில் தரவில்லை என்று கூறியுள்ளார் சோனா. இந்த மாதிரி மலிவான விளம்பரம் தேடிக் கொள்வதை சோனா இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நமீதா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஏன் கொந்தளித்தார் நமீதா? சினிமாவில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானாலும், திரையுலகில் எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ளாதவர் நமீதா.

 அவரைப் பற்றி இதுவரை எந்த கிசுகிசுவும் வந்ததில்லை. அவரது நடத்தை குறித்த தவறான செய்திகளும் கூட எந்தப் பத்திரிகையிலும் இடம்பெற்றதில்லை. ஆனால் அவர் பெயரை, அவர் தொடர்பான காட்சிகளை புதுப்படங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் கூட விவேக் நமீதா ரசிகராக வருவார். இன்னொரு புதுப்படம் எத்தனிலும் நமீதா இடம்பெறும் காட்சி உள்ளது. ஆனால் இதையெல்லாம் நமீதா எதிர்க்கவில்லை.

 இந்த நிலையில் கோ படத்தில் நமீதா போல வேடமிட்டு தேர்தல் பிரச்சார மேடையில் இரட்டை அர்த்தத்தில் சோனா பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் நமீதா போலவே, ரசிகர்களைப் பார்த்து மச்சான்ஸ் மச்சான்ஸ் என்று அவர் அந்தப் படத்தில் இமிடேட் பண்ணியிருப்பார். இதுபற்றி முன்பே நமீதாவிடம் சிலர் கேட்டனர். அதற்கு நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டார் நமீதா. இப்போது சோனாவின் தோவையில்லாத பேட்டி அவரை இந்த அளவு கொந்தளிக்க வைத்துள்ளது!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.