இந்த சுதந்திர வேட்கையினதும், தமிழினப்போராட்டத்தினதும் ஆரம்பமாக இருக்கக்கூடிய மாவீரன் எல்லாளனது வரலாறு அதை மறப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த மாவீரனின் போராட்ட வரலாற்றின் பரிணாமமே இன்று எமது விடுதலைப் போராட்டம்.
அந்த மாவீரனின் பெயர் இறைச்சிக்கடைகளுக்கும், மீன் சந்தைகளுக்கும்; சூட்டப்பட்டுள்ளது. அதை கண்டுகொள்ளாது இருப்பது வெட்கக்கேடான விடயம்.
இன்று தமிழர்களின் மன்னன் எல்லாளன் இறைச்சிக்கடைகளும், மீன் சந்தைகளும்- நாளை தமிழீழ மாவீரர்கள் இறைச்சிக்கடை, மீன் சந்தைகள் என்றும், பண்டாரவன்னியன் பெயரில் பிரியாணி கடைகள் என்றும் அந்த மாவீரர்களுக்கு இந்தப் பெருந்தகை வியாபாரிகள் இப்படித்தான் மரியாதை செலுத்துவார்கள். ஏன் பிரபாகரன் பெயரிலும் இவர்கள் இறைச்சிக்கடை வைப்பார்கள். எம்தமிழ் நெஞ்சங்களே சிந்தியுங்கள்!!!
எமக்கு நடந்த கொடுமைக்கு அதைத் தடுப்பதற்கு உலகில் யாரோ எல்லாம் பொறுப்பிலிருந்தும் மௌனமாக இருந்துவிட்டார்கள் என்று குமுறிக் கோபப்படும் நீங்கள், உங்கள் கண் முன்னே ஒரு மாவீரன் பெயரும் அவன் வாள்; உம் இறைச்சி வெட்டுவதற்கும், மீன் அறுப்பதற்கும் விளம்பரப்படுத்துவது கண்டு மௌனித்துப்போனது ஏன்?
சுவிசிலுள்ள சமூக அமைப்புகளானாலும் சரி கலைபண்பாடு வரலாற்று விழுமியங்களை பாதுகாக்கும் பொறுப்பு மிக்கவர்களானாலும் சரி,பொறுப்புமிக்க இணையத்தளங்களானாலும் சரி ஏன் கண்டுகொள்ளவில்லை?
தமிழாட்சி புரிந்த மாவீரன் எல்லாளன், மாவீரன் பண்டாரவன்னியன் போன்றோரினதும் தமிழாட்சிக்காக இன்றுவரை போராடிய எம் மாவீரர்களின் வரலாற்றை எல்லாம் இங்கு வாழும் இளைய தமிழ் தலைமுறைக்கு அறிவூட்டி அவர்களின் திறமைக்கும், புலமைக்கும் இந்த மாவீரர்களின் பெயரால் விருது வழங்குவதே பொறுப்புமிக்கவர்களின் சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கப்போகிறதா அல்லது எம் இளம் சந்ததிக்கு நீங்கள் காட்டும் வரலாற்றுக் கற்பிதம் இந்த விளம்பரம்தானா?
எமது மாவீரர்களை அவமதிக்கும் வகையில் எல்லாளன் இறைச்சிக்கடை என்றும் மீன்கடை என்றும் பெயர் வைத்து வியாபாரம் நடத்துபவர்கள் வேறு யாருமல்ல. மகிந்த…டக்ளஸின் அடிவருடிகள் தான்.
நெஞ்சுபொறுக்குதில்லையே……. எம் தமிழ் நெஞ்சங்களே சிந்தியுங்கள்!!!
ஈஸ்வரன், சுவிஸ்