கறுக்காத்தீவில் இருதரப்பு வேட்பாளர்கள் ஓரே ஊரில் இருந்தமையால் அங்குவாக்குகள் சிதறியிருக்க வாய்ப்புகள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆலங்கேணி போன்ற இடங்களில் வாக்களிக்க தமக்கு போதிய விபரம் போதாது இருந்தது என்று கவலைப் பட்டதாகவும் கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தாம் எந்தப்பக்கம் என்று காட்டவிரும்பாத ஒரு தொகுதியினரும் காணப்பட்டதால் அதிக கழிவுவாக்குகளும் இப்பிரதேசசபையில் விழலாம் என்றும் எதிர்பார்க்கலாம். கணபதிப்பிள்ளை.கணேசு அவர்களும் ஒரு வேட்பாளர் அவர்களை நேற்றைய தினம் இராணுவத்தினர் விசாரணை செய்து விட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனையபகுதிகளிலும் வில்லடி பரம்பன்கிராய் வாக்களர்கள் அக்கறையுடன் வாக்களித்ததாகவும் ஏனையபூநகரிப் பிரதேசசபைப் பகுதிகளிலுாக 75 விழுக்காடு வாக்குப் பதிவாகியருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.