22.07.2011மீள்குடியேற்றம் குறித்து யெயலலிதாவிற்கு விளக்கமளித்த பிரசாத் காரியவசம் தமிழக முதல்வர் யெயலலிதாவை, இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளிண்டன் தமிழகத்திற்கு நேற்று பயணம் செய்து தமிழக முதல்வர் யெயலலிதாவை சந்தித்துப் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து பிரசாத் காரியவசம் இன்று யெயலலிதாவை சந்தித்துள்ளார்.
இன்று தலைமைச் செயலகத்தில் யெயலலிதாவை சந்தித்த பிரசாத் காரியவசம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவது குறித்து விளக்கமளித்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கைவிடுமாறு யெயலலிதா வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பின் போது துணை தூதர் வடிவேல் கிருச்ணமூர்த்தி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.