20 .07. 2011 -- கிளிநொச்சி தேர்தல் பிரச்சாரம் தோல்வியில் முடிந்தது இலங்கையில் நடைபெறப்போகும் உள்ளூராட்சி தேர்தலில் தனது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் ராசபக்ச கலந்து கொள்ளவிருந்தார்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தை மாபெரும் இசை நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்ட இலங்கை அரசு தமிழகத்திலிருந்து பாடகர் மனோ, கிரிச், சுசித்ரா ஆகியோரை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார்.
இலங்கை அரசின் அழைப்பை ஏற்று அவர்களும் இன்று கொழும்பு சென்றனர். ஆனால் தமிழக இசைக்கலைஞர்கள் ராயபக்சவின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என சீமான், நெடுமாறன் போன்றோர் மனோ, கிரிச், சுசித்ரா ஆகியோருக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என்றும் பாடகர் மனோவிடம் கோரிக்கை விடுத்தனர்.