குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

பூநகரி மீது காதல் கொண்டு ஒற்றுமைக்கு சிலவரிகள்

நாம் பூநகரிச் செடிகளின் பூக்கள் ஒரே மரத்தின் கிளைகள்
 கட்சியென்ற  கத்திகளால் வெட்டுண்டு வெவ்வேறு ஆகாது
என்றென்றும் ஒட்டுண்டு குழையல் சோறுண்டு வாழ்வோம்.

  வெவ்வேறு கிளைகள் என்று எண்ணினாலும்
  அடிமரம் ஒன்று என்று எண்ணுங்கள்
அது வாடியடி ஆலமரம் பலமான பலகாலமரம்.

 அதன் கிளைகளும் விழுதுகளும் பல
  அதன் ஆணிவேர் ஒன்று
       அந்தவேர் பூநகர் என்ற வேர்.

உலகிற்கு சக்கரை(சீனி) அறிவித்த
    கரும்புற்கள் (பனைகள்.)
ஈடுசெய்ய வந்தது கரும்பு
 
கரும்புல்லில் இருந்து வந்ததே
  கரும்பு கருபிலிருந்து வந்ததே
இனிப்பென்ற இன்பமான சொல்லு.

நாம்கௌதாரி முனைப் பனைமரங்கள்
     அந்த மண்குவியல்கள் வெறும்
 மண்களல்ல தமிழினவரலாற்றுக் குவியல்கள்.

இதை அறிய எம்மிடம் அறிவியல் இல்லை
 சான்றுகளை ஆதாரப்படுத்த அங்குள்ளோருக்கு
     ஆர்வமுமில்லை அதை அறிந்துமில்லை.

பழைய தாளிகள் பழையநணயங்கள்
 பழை படையல் மடை முறை
வழிபாட்டு நிகழ்வுகளுடன் பெரும்படை

அத்தெய்வம் ஆணாபெண்ணா அறியமுடியாது
 பலரையும் ஈர்த்து அருள்பாலிக்கும்
    அம்மனென்பர் கண்ணனென்பர்.

தமிழர் திராவிடர் அம்மன் முறையினர்
  ஆரியரான எதிரியானவர் கண்ணன் முறையினர்.
வேறுபாடு புரியாத புலம்பல்ளும் உண்டு.

நாம் சோலை வேரவில்கிராஞ்சித் தென்னை மரங்கள்
   முழங்காவிலின் வாழைமரங்கள்
குழாய்க்கிணற்று உழைப்பின் ஊற்றுக்கள்.

பத்தினிப்பாய் பாலைமரங்கள்
 வெரவில் வெளித் தேக்குமரங்கள்
    பல்லாய் சவுக்குமரங்கள்.

கொக்குடையான் வெளியில்
  துள்ளி ஓடும் புள்ளி மான்கள்
தண்ணியில் துள்ளும் விலாங்குகள்.

பொன்னாவெளிப் ஆக்கள்
 பல்லவராயன் கட்டு குளத்தின் அணைகள்
  நாச்சிக்குடாவின் படகுகள்.

வாடியடிக் கோட்டைக் கற்கள்
 அந்தஆலமரத்தின் விழுதுகள்
நல்லுார்க் கட்டுக்கரைக் காவடிகள்.

அத்தாய் நாலாங்கட்டை பள்ளிக்குடா

மட்டுவில்நாடு வில்லடிசெட்டியகுறிச்சி

தம்பிராய் அத்தனையும் அயற்கிராமங்கள்.

வெட்டினாலும் கொத்தினாலும் கொழுத்தினாலும்
 மீண்டும் தளைக்கும் மிடுக்குடன் வளரும்
    பெரும் காடுகள் படர்பற்றைகள்.

உயரிப்பிட்டி கள்ளிப்பிட்டி தோட்டவெளிகள்
 கத்தரிக்காய் மிளகாய் மரக்கறிகள்.
கதிர்காமக் கந்தனமர்ந்த கரிக்கோட்டுக்குளக்காரர்.

பூநகரிக் காட்டு ஆனைகள்
  நாம் செத்தாலும் ஆயிரம் பொற்காசு
சங்குப்பிட்டியின் சங்குகள் சுட்டாலும் நாம்வைண்மை.

 நாம் சித்தன் குறிச்சியின் சித்தர்கள்
   மடம் கட்டி வாழ்ந்த ஞானிகள்
     நாம் குமரிநாட்டுக் குடிகள்.

தமிழ் இனத்தின் பூர்வீகங்கள்
 நாகதீபம் என்ற வன்னியின்
வடநுனி நிலத்தினர் நாகர்.

நாம் உலகெங்கும் பெயர் போன பூநகரி
 மொட்டைக்கறுப்பன் அரிசியின்
சொந்தக்காரர்கள்.

உங்கள் உழவு இயந்திங்கள்
 ஓடும் ஒலி கேட்கிறது பள்ளத்தில் விழுந்தேறும்
   போது தகரமும்மரப்பலகையும் கலகலக்கும் சத்தம் சங்கீதமாய்க் கேட்கிறது.

பள்ளிகளில் கற்றுக் கொடுத்தவர்கள்
 வயல்களில் கடினமாய் உழைத்தவர்கள்
   கறுக்காய்த் தீவுமக்கள்.

செல்லையாதீவில் செம்மையாய்

நெல்விளையம் ஆரியம்பொந்தில்

செத்தல்மிளகாய் காயும் ஆலங்கேணியில்

இராமன்களப்பில் உப்பு விளையம்

ஆடிமாதம் இப்போ பனங்காய்விழும்.

பினைந்து காயவைத்தா பனாட்டுவரும்

பனங்களியில் பனம்பிட்டு பலகாரம்

 உண்டுமகிழ அங்கு சூழ்நிலைதான்

சரியில்லை.

 பொன்னம்பலம்.முருகவேள் ஆசிரியர்-பூநகரி..சுவிசு 19.07.2011
   

தொடரும்.....

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.