குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

படப்பிடிப்பு கருவியை துப்பாக்கியாய் நினைத்து கையை உயர்த்தி வெம்புகின்ற சிரிய பிஞ்சுக் குழந்தை உலகை

31.03.2015-உலுக்கியது:ஒபாமாவினால் கெளரவிக்கப்பட தமிழ் விஞ்ஞானி.சிரியாவில் ஒளிப்பதிவுகு் கருவியைப் பார்த்து துப்பாக்கி எனப் பயந்து இரு கைகளையும் தூக்கி விம்மி விறைத்து நின்ற பிஞ்சுக் குழந்தை உலக மனங் களை உறைய வைத்துவிட்டது.

உலகையே உலுக்கிய புகைப்படம் இது. பிஞ்சு முகத்தில் பயம். அழுகை வெடிக்கும் நிலை. கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை.

இந்தக் காட்சியைப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு சபான்.

சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டு பழகிய இக்குழந்தை, படம் பிடிக்க கெமராவை சரி செய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது இணையத் தளத்தில் பலரையும் அதிர வைத்துள்ளது.

விஞ்ஞான, கணித, மற்றும் பொறியியல் வழிகாட்டுதலுக் கான சாதனையாளர்களுக்கான அமெரிக்க அதிபர் விருது க்கு தெரிவு செய்யப்பட்டுள்ள, இலங்கைத் தமிழரான விஞ் ஞானி உள்ளிட்ட 14 பேர் அமெரிக்க அதிபர் ஒபாமாவினால் கெளரவிக்கப்படவுள்ளனர்.

அமெரிக்க அதிபரினால் விருது அளிக்கப்படவுள்ள 14 பேரில், இலங்கைத் தமிழரான திலக் ரத்னநாதரும் ஒருவராவார்.

திலக் ரத்னநாதர், அமெரிக்காவின் மேரிலான்ட், யோன்சு கொப்கின்ஸ் பல்கலைக்கழக, உயிரிமருத்துவ பொறியியல் பீடத்தின், உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த ஆண்டு இறுதியில் வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ள நிகழ்வில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவினால் இவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கல்வியாளர்கள் அமெரிக்காவின் எதிர்கால விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், கணிதவியலாளர்களை உருவாக்க உதவியுள்ளனர் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபரின் விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 14 பேரில், மூர்த்தி எஸ்.கம்பம்பட்டி என்ற இந்திய வம்சாவளி உயிரியல் பேராசிரியரும் அடங்கியுள்ளார்.

இவர்களுக்கு 10 ஆயிரம் டொலர் பணப்பரிசும், கௌரவ விருதும் அளிக்கப்படவுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.