இவருக்கும் மனைவிக்கும் இடையில் அடிக்கடி குடும்பத்தகராறு இடம்பெறுவது வழக்கம். அதேபோல் இன்று பிற்பகல் திங்கள்கிழமை கணவன்-மனைவிக்குமிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராற்றில் ஆத்திரமுற்ற மனைவி உலக்கையால் தனது கணவரை தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த பால்ராச் சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரின் தலையின் உள் பகுதியில் இரத்தக்கண்டல் ஏற்பட்டுள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் விபத்து சேவைக்குப் பொறுப்பான வைத்தியரொருவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்