குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

உலக வங்கிக்கு போட்டியாக “புதிய ஆசிய வங்கி”: சுவிட்சர்லாந்து இணைந்தது

29.03.2015-சீனா தலைமையில் உருவாக்கப்படும் புதிய ஆசிய வங்கியின் உறுப்பினர் நாடுகளுடன் சுவிட்சர்லாந் தும்  இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக வங்கிக்கு போட்டியாக சீனா தலைமையில் Asian Infrastructure Investment Bank (AIIB) என்ற வங்கியை தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த வங்கியை உருவாக்கும் உறுப்பினர் நாடுகள் பட்டியலில் பிரான்சு(ஸ்), யேர்மனி, இத்தாலி மற்றும் பிரித்தானிய நாடுகள் சில வாரங்களுக்கு முன் இணைந்தது.

இந்நிலையில் இந்த நாடுகளின் பட்டியலில் தற்போது சுவிட்சர்லாந்தும் இணைந்துள்ளதாக சீனாவின் நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த திட்டத்தில் இணைந்துக்கொள்ள ரச்யா சனிக்கிழமையன்று(28.0315) விண்ணப்பம் செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் Igor Shuvalov தெரிவித்துள்ளார்.

புதிய ஆசிய வங்கியில் உள்ள முதலீடு மற்றும் உறுப்பினர் நாடுகள் பங்களிக்கும் தொகையை கொண்டு, ஆசிய நாடுகளுக்கு கடனுதவி அளித்து அந்நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவதே இந்த புதிய வங்கியின் நோக்கமாகும்.

இந்த வங்கியில் ஏற்கனவே சீனா சுமார் 50 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. உறுப்பினர் நாடுகள் அளிக்கும் பங்களிப்பை சேர்த்தால் எதிர்காலத்தில் 100 பில்லியன் டொலராக வங்கியின் முதலீடு இருக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.