சென்னை செல்லும் திருமதி கிளிங்கடன் அவர்கள் இலங்கைத் தமிழர் விடையம் தொடர்பாக செல்வி யெயலலிதாவோடு பேசவேண்டும் என பல தரப்பாலும் அழுத்தங்கள் பிரியோகிக்கப்பட்டு வந்ததோடு, பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. இன்று(18.07.2011) அமெரிக்க ராசாங்கத் திணைக்கள உயரதிகாரி ஒருவர் இந்திய செய்திச்சேவைக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றில், கிலரி கிளிங்கடன் அவர்கள் நிச்சயமாக இலங்கைத் தமிழர் குறித்துப் பேசுவார் என உறுதிப்படுத்தியுள்ளார். கிலரி கிளிங்கடனின் சென்னை பயணத்தில் அரசியல் எதுவும் இல்லை என்றாலும் நிச்சயம் இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி பேசப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளது இலங்கை அரசுக்கு விழுந்த பேரிடியாக உள்ளது !
சமீபத்தில் தமிழக முதல்வர் செல்வி யெயலலிதா அவர்கள் இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரவேண்டும் எனக் குறிப்பிட்ட கருத்துகளை, இலங்கை வன்மையாகக் கண்டித்ததோடு, தாம் மாநில அரசுகளோடு பேசுவது இல்லை என்றும் தெரிவித்து, மாநில அரசை ஒரு செல்லாக்காசு என வர்ணித்திருந்தது. ஆனால் உலகின் பலம் மிக்க பதவியில் இருக்கும் திருமதி கிளிங்டன் அவர்கள், செல்வி யெயலலிதாவோடு பேசவிருப்பது தொடர்பாக இலங்கை அதிருப்தியடைந்துள்ளதாகவும், இருப்பினும் அதனைத் தடுக்கும் வல்லமை இல்லாது இருப்பதாவும் அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் நாட்டில் வாழும் 6 கோடித் தமிழர்களும் ஈழத் தமிழர்கள் மீது அக்கறையும், கரிசனையும் கொண்டுள்ள நிலையில், ஈழத் தமிழர்கள் பற்றி பேசாமல் வருவது, ஒரு நியாயமான செயலாக அமையாது என அமெரிக்க உயரதிகாரி கருத்து தெரிவித்துள்ளார் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.கிலாரி யெயலலிதாவுடன் இலங்கை தொடர்பாக பேசப்படலாம் - ரொபர்ட் ஓ பிளேக் :
18 .07. 2011 அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிpலாரி கிளின்டன் மற்றும் தமிழக முதலமைச்சர் யெயலலிதாவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் இலங்கை தொடர்பாக பேசப்படலாம் என அமெரிக்கா தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார துணைச்செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
எனினும் கிலாரி கிளின்டன் தன பயணத்தின் போது, இலங்கை தொடர்பாக பேச மாட்டார் என இந்திய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மக்கள் இலங்கை நிலைமைகுறித்து கூடிய அக்கறை செலுத்தியுள்ளதாகவும் அது கிளின்டன் மற்றும் யெயலலிதா சந்திப்பில் கட்டாயமான ஒரு அங்கமாக இருக்கும் எனவும் பிளேக் கூறியுள்ளார்.
அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளின்டன் இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தின் போது அவர் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிராந்திய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரியவருகிறது.
கிளின்டன், தனது இந்திய பயணத்தின் போது, பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எசு.எம். கிருசுணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.