281. |
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. |
282. |
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். |
283. |
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். |
284. |
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். |
285. |
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். |
286. |
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். |
287. |
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல். |
288. |
அளவறந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. |
289. |
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். |
290. |
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு. |