ஆஸ்திரேலியாவில் உள்ள நேஷனல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வல்லுநர்கள் மண்ணுக்குள் புதைந்து கிடந்த ஒரு விலங்கின் எலும்புக் கூடுகளை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அவற்றில் புற்று நோய்க் கட்டிகளை உருவாக்கக் கூடிய செல்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் புதையுண்டு கிடந்த விலங்கின் எலும்புக் கூட்டை சோதனை செய்ததில், அது 60 கோடி ஆண்டு பழைமையானது எனவும் கண்டறியப்பட்டது. இதன் மூலம் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்று நோய் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி உயிரோடு இருந்து வருகிறது என தெரிய வந்துள்ளது.