சர்வதேச சமூகமும், இந்தியாவும் அரசியல் தீர்வு குறித்து மிக ஆழமாக தெளிவாகச் சுட்டிக்காட்டி வருகின்றன. ஆனால், இவர்களும் இதுதான் தீர்வு என்று எதையும் சுட்டிக்காட்ட முன்வருகிறார்கள் இல்லை.
கடந்த வாரம் புதுடில்லியில் இந்திய வெளிவிவகார உதவிச் செயலாளர்கள், செயலாளர் ஆகியோரைச் சந்தித்த போது போர் முடிந்து இரண்டு வருடங்களாகி விட்டது. ஆனால், இன்னும் அந்தப் போர் உருவாகக் காரணமான விவகாரத்துக்குத் தீர்வு காணப்படவில்லை என்று வெளிப்படையாகக் கூறினர்.
இலங்கை அரசாங்கம் போரில் வெற்றி கொண்டு விட்டது. ஆனால், தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ளவில்லை. நியாயமான, நீதியான தமிழ் மக்களின் சுய கௌரவத்தை உறுதிப்படுத்தக் கூடியதான தீர்வினை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதன் மூலமே தமிழ் மக்களை முழுமையாக வெற்றி கொள்ள முடியும் என்ற கருத்தே இந்திய வெளிவிவகார அமைச்சின் உள்ளக் கிடக்கைகளாக அங்கு வெளிவந்தன.
இதே குரலிலேயே இந்தியாவின் முக்கிய பத்திகைகளின் ஆசியர்களும் பேசினர். எம்மவர்களை விட இன விவகாரத் தீர்வில் மிகுந்த அக்கறையை இந்திய வெளியுறவு அமைச்சகம் மாத்திரமல்ல, பெரும்பாலான இந்திய பத்திரிகை உலகமும் கொண்டிருந்ததை நேரடியாகக் காணக் கூடியதாக இருந்தது.
அதுமாத்திரமல்ல, புதுடில்லிக்கு வருகை தந்திருந்த மாலைதீவு பத்திரிகையாளர்களும் இன விவகாரத் தீர்வில் காட்டிய அக்கறை அளப்பரியதாக இருந்தது.
அண்மையில் பத்திரிகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ““தீர்வு'' என்ற ஒரு பாறாங்கல்லை உயர்ந்த மலையின் அடி வாரத்திலிருந்து மலை உச்சிக்கு மிகச் சிரமத்துடன் தள்ள முயற்சிப்பதான ““காட்டூன்'' சித்திரம் வெளிவந்திருந்தது.
இன்றைய சர்வதேச இந்திய பின்புலத்தை வைத்துப் பார்க்கும்போது, தீர்வு குறித்து கூட்டமைப்பினர் அல்லது தமிழ் தரப்பினர் ““தீர்வு'' என்ற பாறாங்கல்லை மேல் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கத் தேவையில்லை. ““பாறாங்கல்லுக்குப் பதிலாக தீர்வுப் பொதியைத் தூக்கிப் போடுங்கள்'' என்று தான் நாம் கேட்கின்றோம். இதனையே தொடர்சியாக இப்பந்தியில் வலியுறுத்தியும் வருகின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட தமிழர் தரப்பினர் வெற்றுக் கைகளை வைத்துக் கொண்டு தீர்வினைப் பெற்றுவிட முடியாது. இதற்கு பதிலீடாக அரச தரப்பும் தன்னிடம் இல்லாத ஒரு தீர்வு பற்றி தொடர்ந்தும் பேசுவதற்கு சளைக்காது.
எனவேதான், தமிழர் தரப்பிடம் குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தமிழ் இனத்தின் பெயரால் மீண்டும் ஒரு கோரிக்கை முன்வைக்கின்றோம்.
முடமோ, நொண்டியோ, ஒரு தீர்வுப் பொதியினை முன்வையுங்கள்.
அரச தரப்போ, தென்னிலங்கையோ இதற்கு ஒரு போதும் உடன்படப் போவதில்லை. எனினும், அரச தரப்பும் தென்னிலங்கையும் ஒருதீர்க்கமான முடிவை எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படும். அப்படியில்லையேல், சர்வதேச சமூகத்தின் முன், தோலுரிந்து நிர்வாணமாக நிற்கும் நிலையை உருவாக்கும்.
புதுடில்லியில் (Oஞண்ஞுணூதிஞுணூ கீஞுண்ஞுச்ணூஞிட ஐணண்tடிtதtஞு) இல் சந்தித்த ஒருவருடம் ““இலங்கை அரசாங்கம் தீர்வை முன்வைக்குமா?'' எனக் கேட்டபோது, தீர்வை முன்வைக்கவேண்டிய நெருக்கடியான கால கட்டத்தில் இலங்கை உள்ளது. தீர்வை முன்வைப்பதன் மூலமே இலங்கையை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த முடியும். ஆனால், இலங்கை அரசாங்கம் தீர்வினை முன்வைக்க முன்வராது. தனது சவக்குழியைத் தானே தோண்டிக் கொள்ளும் ஒரு நிலையையே உருவாக்கும் என்று அவர் கூறியதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
அவ்வாறு இல்லாது வெறுங்கையுடன் தொடர்ந்தும் பேசுவதால், ஆகப் போவது ஒன்றுமில்லை. காலவிரயத்தை உருவாக்குவதைத் தவிர வேறு ஒன்றும் நடைபெறப் போவதில்லை.
தமிழினம் துன்ப துயரங்களையும் சுமைகளையும் தொடர்ந்தும் தாங்கிக் கொண்டு, நெடுந்தூரம் பயணிக்க முடியாது என்பதைக் கூட்டமைப்பு உட்பட தமிழர் தரப்பு உணர்ந்து கொள்ள வேண்டும்.
முள்ளிவாய்க்காலுடன் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் முற்றுப் பெற்று விடவில்லை. அதனை முன்னெடுத்துச் செல்லும் பாரிய பொ றுப்பை தார்மீகக் கடமைப்பாட்டை புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் சுமந்து நிற்கின்றனர். இந்த வேண்டுகோளை, கனடாவில் வைத்துக் கூறியபோது ஒரு அன்பர் பின்வருமாறு கேள்வி எழுப்பினார்.
“புலத்தில் உள்ளவர்கள் தியாகம் செய்யாது, எவ்வாறு புலம்பெயர் வாழ் தமிழர்களால் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்'' எனக் கேள்வி எழுப்பினார்.
நீங்கள் ஜனநாயகம் தழைத் தோங்கும் மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியல் தமிழர் அபிலாஷை குறித்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல சகல வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு உள்ளன. இலங்கை மண்ணில் இதற்கான சந்தர்ப்பங்களை மறுதலித்து நிற்கின்றது.
முள்ளிவாய்க்காலில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தமது உயிரைக் காணிக்கையாக்கியிருப்பது போதாதா? என்ற பதிலுடன் அவருடனான உரையாடலை முடித்துக் கொண்டேன்.
இது ஒரு சிறு துளி! இதற்கும் அப்பால் இலட்சக்கணக்கான புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மேற்கூறிய கருத்தியலுக்கு அப்பால் நின்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதை மிகுந்த பெருமையுடன் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.
ஆனால், புலம்பெயர் வாழ் தமிழர்களிடையே நிலவுகின்ற ஒற்றுமையின்மை, பிளவு, பேதம், போட்டி, முரண்பாடு என்பன தமிழர் அபிலாஷைகளைத் தூக்கி நிறுத்தத் தடையாக இருக்கின்றன என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றோம்.
இதனால், இலாபம் அடையப் போவது தமிழினம் அல்ல தென்னிலங்கை சக்திகளே என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
சிங்கள சக்திகளைப் பொறுத்து அவர்கள் தமக்குள் முரண்படலாம், ஆட்சி அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்வதில் போட்டி நிலவலாம், ஆனால், தமிழினத்துக்கு எதிரான நிகழ்ச்சி நிரலில் ஓர் அணியில் நிற்கின்றனர், வெற்றியும் பெறுகின்றனர்.
ஆனால், நாமோ பிளவையும், பிவையும் பெரிதுபடுத்துகின்றோமேயொழிய, தமிழினத்தின் இலட்சியப் பயணத்தை மறந்தவர்களாகச் செயற்படுகின்றோம். நாம் பிரிந்து நின்றால் அல்லது எமக்குள் முரண்பட்டுக் கொண்டு நின்றால், சர்வதேசமும், இந்தியாவும் எமக்காக பேசுவதிலோ அல்லது எமக்காக செயற்படுவதிலோ அர்த்தமிருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
17 .07.2011 திட்டத்துக்கு முன்னோடியான ஒளித் திட்டம். யாழ். மாவட்டத்தில் மீளவும் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக இந்திய அரசின் நிதி உதவியில் வடக்கில் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கு முன்னோடியான லைட்புறொஜெக்ட் யாழ். மாவட்டத்தில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் வீட்டு
த் திட்டம் இந்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்திருந்தது. அது தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் 50 ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனடிப்படையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா யாழ்ப்பாணத்துக்கு வந்து அரியாலை நாவலடியில் அடிக்கல் நட்டார்.
இதன் பின்னர் கடந்த 7 மாத காலமாக எந்தவிதமான வேலைக்களும் மேற்கொள்ளப்படாமல் அந்தத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. தற்போது மீண்டும் அந்தச் செயற்றிட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முன்னோடியாக 150 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதனடிப்படையில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 50 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதில் இந்திய வெளிவிவகார அமைச்சர் அடிக்கல் நட்ட அரியாலை நாவலடியில் முழுவீச்சில் வீடமைப்புத் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தகாரர் இந்திய அரசினாலேயே நியமிக்கப் பட்டுள்ளனர். பெரும்பாலும் அடுத்த மாத ஆரம்பத்தில் முன்னோடி வீட்டுத் திட்டப் பணிகள் நிறைவடையும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.