வெள்ளையர்களின் பிறந்தநாளுக்கு கொடுக்கும் முன்னுரிமைகூட ஆடிப்பிறப்பிற்கோ தைப்பொங்கல் தமிழப்புத்தாண்டிற்கோ கொடுப்பதில்லை.
இந்த இரண்டுமே தமிழர்களின் சிறப்பு கொண்டாட்டநாளாகும். இவற்றை விடுத்து ஏனைய இந்தியக் கொண்டாட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பழகிவிட்டோம்.
இதன்பின் பௌத்தத்தோடு மட்டும் மல்லுக்கட்டுவதும் கவலைப்படுவதும் தவறாகும். பிள்ளையார் பிற்காலத்தில் தான் தமிழர்களின் வழிபாட்டுக்கடவுளாகினார்.
சேர்ப்பதற்காக முன்னுக்கு முதலுக்கு என்று பலகாரணங்களைக் கூறி எமது வழிபாட்டில் ஒட்டவைத்து இன்று தனிக்கோவில்களும் இருக்கின்றன.
அதேபோன்று கிருச்சுணர் கோவில்களும் ஒட்டவைக்கப்பட்டு வளர்ந்தவையே. கண்ணன் ஆலயங்கள் புதிதாக முளைத்தாலும் அவை இன்று விகாரைகளைவிட மிகவேகமாக இந்தியாவின் மறைமுக ஆதரவுடன் வளர்ந்து பெரிதாகிவிடும்.
அதேபோன்று தமிழர் கொண்டாட்டங்கள் பின்தள்ளப்பட்டு அயல்நாட்டு பண்பாட்டு கலாச்சாரக் கொண்டாட்டங்களே தமிழர்களிடத்தில் தாக்கம்பெற்று விட்டது.
இதனால் ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு மேலாக மெல்ல மெல்ல மாற்றப்பட்டு தமிழச் சுயம் இழந்திருப்பதை யாரும் உணரவாய்ப்பில்லை இதனால் இப்படியான தமிழ் இனத்திற்கு சாதகமான கருத்துக்கள் மக்களிடம் செல்வதில்லை ஆனாலும் சிலராவது தமது வாழ்விலாவது எண்ணிச் செயற்படுவதால் மீண்டும் 5000 ஆண்டுகளிலாவது தமிழர்களின் சிலஆவது காக்கப்படும் மீள்நிலைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.