16.07.2011-உயர் ஊடகவியலாளரும், உதயன் – சுடர் ஒளி பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியருமான ந.வித்தியாதரன் – இரத்தினகலா தம்பதியரின் புதல்வியர்களான சிவகாமி, சிவப்பிரியா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம்
இன்று மாலை 6மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நாட்டிய அரங்கேற்றத்திற்கு புதுடில்லியைச் சேர்ந்த பரதநாட்டிய தாரகை ஸ்ரீமதி ரமா வைத்தியநாதன் பிரதம விருந்தினராகவும், வீரகேசரி பத்திரிகையை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குநரும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவருமான எஸ்.குமார் நடேசன் கௌரவ அத்தியாகவும், அகில இலங்கை கம்பன் கழகத்தைச் சேர்ந்த ‘கம்பவாரிதி’ இ.ஜெயராஜ் சிறப்பு அதிதியாகவும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
சகோதரிகளான சிவகாமி -சிவப்பிரியா ஆகியோர் ‘நாட்டிய கலாமந்திர்’ இயக்குநர் கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவிகளாவார்.