தமிழர்களின் பாரம்பரியமுறையில் நிகளும் வழிபாட்டு முறைகளை ஒதுக்கி தமிழினப் பண்பாட்டிற்கே துரோகம் இழைக்கும் ஒரேயொரு கூட்டமென்றால் நாமாகவே இருக்கமுடியும்.
கதிர்காமம் எமதுகோவில் என்ற மனஆளுமையை தமிழர்கள் வளர்த்து புதியதலை முறையினரிடமும் அதைச் செலுத்தவேண்டும்.
நைநாதீவிற்கு அவர்கள் உரிமையோடு வருவது போல் கதிர்காமத்திற்கு உலகிலிருந்து தமிழர்கள் சென்றுவருவது தமிழகத்திலிருந்து சென்றுவருவது என்பது பாரியளவிலான பண்பாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தென்னிலங்கையில் அரசியல் ஆதிக்கம் இல்லாவிட்டாலும் பண்பாட்டு ஆதிக்கத்தை தக்கவைக்க யாராலும் தடுக்க முடியாத ஒரேயொருவழி இது.
எனவே இலங்கை இந்தியாவின் பண்பாட்டுப் படையெடுப்பிற்குப் பதிலாக இவ்வாறான எமது தனித்துவங்களை உலகளவில்பரப்பிப்பேணுவது ஒவ்வோரு தமிழர்களின் தவறாத கடமையாகும்.
என்னடா ஆன்மீகத்தை அரசியலாக்குகின்றார்கள் என்று எண்ணவேண்டாம். வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட கிறிசுவபழமைவாதக்கட்சி என்று இருப்பதைப் பாருங்கள் உணருங்கள்.
ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பானவை இவற்றைவிட்டு கதிர்காமம் சிங்களவர் கைக்கு சென்றுவிட்டதென்று தமிப்பண்பாடும் இந்துவத்துப் பண்பாடும் வேறு வேறானது என்று தெரியாத அரைகுறைத்தனக்கவலை அது.
ஏன் சிங்கக்டியே கண்டியில் ஆட்சிசெய்த தமிழ்ச்சிற்றரசனின் கொடி இதுவெள்ளையரால் எடுத்துச்செல்லப்பட்டு கண்டியர்களைத்திருத்திப் படுத்தும் நோக்கில் அக்கொடி இலங்கைக்கொடியானது என்பது எத்தனைதமிழர்களுக்கு தெரியும்.
எனவே தமிழர்நாம்தான் எமதான எல்லாவற்றையும் சிங்களஅரசஉரிமையாக்கிநோம் என்பதை உணர்க.
அடுத்தவன் மனைவியை எமது மனைவியென்றும் எமது மனைவியை அடுத்தவன் மனைவி என்று வாதாடித்திரிவதற்க்கு ஒப்பாகும்.
எனவே கதிர்காமக்கந்தன் உலகத்தமிழனின் பண்பாட்டு விழுமியம் என்பதை மறக்கக்கூடாது.
கதிரமலையில் கால்பதியுங்கள் மாணிக்ககங்கையில் குளியுங்கள் உலகத்தமிழன் தமிழகத்தமிழன் ஆதிக்கம் செலுத்தவேண்டியதேசம் என்பதை கதிர்காமக்கந்தனின் தீர்த்த்தநாளில் தீர்க்கதர்சனத்தோடு குமரிநாடு அறியத்தரக் கடமைப்பட்டுள்ளது.