குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

சுவிசில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது.ஈழத்தமிழர் பிரச்சினையில் பார்ப்பனர்கள்

 15.07.2011-த.ஆ.2042--சுவிட்சர்லந்தில் தஞ்சம் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை காற்பங்காக ஆனி மாதத்தில் வீழ்ச்சி அடைந்திருப்பதாக சுவிசு குடிவரவு அலுவலகம் தெரிவித்துள்ளது. வைகாசி மாதம் 2,245 பேர் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்தனர். ஆனி மாதத்தில் 1,675 பேரே தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளனர். எரித்திரியா நாட்டிலிருந்து தஞ்சம்கோருவோரின் எண்ணிக்கையில் 50 சதவீதம் வீழ்ச்சி அடைந்து காணப்பட்டுள்ளது. ரூனிசியா நாட்டைச்சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களில் 17 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

சுவிசில் தஞ்சம் கோருபவர்களில் பெரும்பாலானோர் ரூனிசியா, எரித்திரியா மற்றும் நையீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

தஞ்சம் கோரி 2010ஆனி வரை விண்ணப்பித்தவர்களில் 38 ஆயிரத்துக்கு அதிகமானோர் சுவிசில் தங்கியிருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்த்திருக்கின்றனர்.

சமச்டி மற்றும் மாநில அதிகாரிகள் விரைவான நடைமுறையைக் கடைப்பிடிப்பதிலும் தஞ்சம் கோரியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக இருப்பிட வசதிகளை செய்து கொடுப்பதிலும் சச்சரவில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சமச்டி குடிவரவு திணைக்களம் அதிகளவான அகதிகளை தங்களிடம் ஒப்படைப்பதாகவும் இது வரவுக்கு மீறிய சுமை என மாநில அதிகாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வட ஆபிரிக்காவில் இடம்பெறும் பதற்றம் காரணமாக தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கலாம் என்று வலதுசாரி அரசியல் கட்சிகள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையிலிருந்து சுவிசு நாட்டிற்கு வருபவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் கொழும்பில் உள்ள சுவிசு தூதரகத்தின் ஊடாக அகதி தஞ்ச விண்ணப்பத்தை சமர்ப்பித்து விசா பெற்று கணிசமானவர்கள் வருவதாகவும், இவர்களில் 90வீதமானவர்கள் சிங்களவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக இருந்த ஒருவருக்கும் சுவிசில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

.ஈழத்தமிழர் பிரச்சினையில் பார்ப்பனர்கள்-மலையாளிகளின் சதி!  
15.07.2011த.ஆ2042--  ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பார்ப்பனர்களும், மலையாளிகளும் எப்படியெல்லாம் காய்களை நகர்த்தினர் என்பது குறித்து திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் ஆதாரங்களை எடுத்து வைத்தார்.ஈழத்தமிழர் பிரச்சினையில் திராவிடர் கழகம் - நடந்து வந்த பாதை என்ன? 
  ஈழத்தில் முக்கிய நிகழ்வுகள் என்ன? இப்பொழுது எங்கே குழப்பம்? எங்கே முட்டுக்கட்டைகள்? திராவிடர் கழக பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் உரை
  25-6-2011 அன்று திண்டிவனத்திலும், 26-6-2011 அன்று புதுச்சேரியிலும், 2-7-2011 அன்று ஆவடி திருமுல்லைவாயிலிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரக் கொடூரன் ராஜபக்சேவைக் கைது செய்யக் கோரும் கூட்டங்களில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆற்றிய உரையின் தொகுப்பு வருமாறு:

இலங்கை என்பது வரலாற்று ரீதியாக தமிழர்களுக்குச் சொந்தமானது. சிங்களவர்கள்தான் குடியேறியவர்கள். அவர்கள் பெரும்பான்மை என்னும் தன்மையில் தமிழர்களை அடக்கி யாளவும், நசுக்கவும் தலைப்பட்டனர்.

வேறு வேறு பகுதிகள்

1600-1700ஆம் ஆண்டு காலகட்டத்தில் போர்த்துக்கீசியர் இலங்கையை ஆண்டபோது தமிழ் பகுதி வேறு, சிங்களவர் பகுதி வேறு என்று பிரித்துத் தனிமைப் படுத்தித்தான் வைத்திருந்தனர்.

அடுத்து வந்த பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியிலும் அதே நிலைதான் தொடர்ந்தது. அதற்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த பிரிட்டிஷ்காரர்கள்தான் இரண்டு பகுதிகளையும் ஒன்றாக்கி ஆட்சி புரிந் தனர். ஈழத் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இன்று நேற்றல்ல. மிக நீண்ட காலமாகவே பகைமை இருந்து வந்ததுண்டு.

1939 ஆம் ஆண்டிலேயே...

இது குறித்து நீதிக்கட்சியின் நிருவாகக் குழுக் கூட்டத்திலேயே தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி யுள்ளனர்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தியதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வ தையும் கமிட்டி கண்டிக்கிறது. அதற்கு ஈ.வெ.ராம சாமி, ராவ் பகதூர் சாமியப்ப முதலியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர் இலங்கைக்குச் சென்று, அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளி யிட வேண்டுமாய் இக்கமிட்டி கேட்டுக் கொள் கிறது என்பதுதான்  முதல் தீர்மானமாய் நிறை வேற்றப்பட்டது.

(விடுதலை 11-8-1939)

ஏதோ சந்தர்ப்பவாதமாக ஈழத் தமிழர் பிரச் சினையை எடுத்துக் கொண்டதல்ல திராவிடர் இயக்கம். 1983ஆம் ஆண்டில் மிகப் பெரிய இனப் படுகொலை ஈழத்தில் நடத்தப்பட்டது. சிறைகள் உடைக்கப்பட்டு குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்ற தோழர்களைத் தாக்கி, அவர்களின் கண்களைப் பிடுங்கி பூட்சு காலால் சிங்களக்  காடையர்கள் இடறினர். அந்தக் கண்களால் தமிழ் ஈழத்தைப் பார்ப்பதாகக் கனவு காணவேண்டாம் என்று எச்சரித்து அந்தக் கொடுமையைச் செய்தனர்.

தமிழன் மாமிசம் கிடைக்கும்!

தமிழன் மாமிசம் இங்கு கிடைக்கும் என்று விளம்பரப் போர்டு வைத்திருந்தனர் என்றால் அந்தக் கொடுமையைப் பற்றித் தெரிந்து கொள்ள லாம். அந்தக் காலகட்டத்தில் அகதிகளாகத் தமிழ் நாட்டை நோக்கி ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர் கள் வந்து சேர்ந்தனர். போராளிகளும் வெளியே றினர். அவர்களில் பலர் முதலில் வந்து சேர்ந்த இடமே பெரியார் திடல்தான்.

உடனடியாக திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை 18-6-1983 அன்று கூட்டி, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டன. சென்னை அண்ணாநகர் புல்லாரெட்டி அவென்யூவில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்தியது திராவிடர் கழகம் (2-7-1983). திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அந்தப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர், பழ.நெடுமாறன், பெருஞ்சித்திரனார், பன்மொழிப்புலவர் எம்.ஏ.லத்தீப் போன்றவர்கள் எல்லாம் கலந்துகொண்டு சங்கநாதம் செய்தனர்.

ஈழத்தமிழர் பிரச்சினைக்காக அந்தக் கால கட்டத்தில் முதன் முதலாவதாக நடத்தப்பட்ட மிகப் பெரிய நிகழ்ச்சியாக அது கருதப்பட்டது. அவ்வாண்டு ஆகஸ்டு 15 ஆம் நாளைத் துக்க நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அனைவரும் கருப்புச் சின்னம் அணிய வேண்டும் என்றும், வீடுகளில் கறுப்புக் கொடியைப் பறக்கவிட வேண்டும் என்றும் பொது இடங்களில் கறுப்புக் கொடியை ஏற்றி, நமது துக்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வது என்றும் சென்னை யில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் (8-8-1993) தீர்மானிக்கப்பட்டு அவ்வாறே கடைப் பிடிக்கப்பட்டது. மதுரையில் ஈழ விடுதலை மாநாட்டை நடத்தியதும் திராவிடர் கழகமே! (1983 டிசம்பர் 17,18)

குமரிநாடன் என்ற ஈழத்தமிழர் ஈழ விடுதலைக் கொடியை அந்த மாநாட்டில் ஏற்றி, லட்சோப லட்சம் மக்களின் எரிமலை உணர்ச்சி வெளிப் படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையில் ஈடுபாட்டு உணர்வுடன் செயல்பட்டு  வந்திருக்கிறது.

தோழர்களே,

ஈழத் தமிழர் தந்தை செல்வநாயகம் அவர்கள்

1949ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சியைத் தொடங் கினார். எடுத்த எடுப்பிலேயே  அவர்கள் ஒன்றும் தனிநாடு கேட்கவில்லை.

சிங்களமே ஆட்சி மொழி!

மொத்தம் 2 கோடி மக்களில் 30 சதவிகிதம் பேர் தமிழர்கள். 1956 ஆம் ஆண்டு சிங்களமே இலங்கை யின் ஆட்சி மொழி என்று சட்டம் நிறைவேற்றப் பட்டது.(Only Sinhala Act 1956)
தமிழ் மாணவர்கள் உயர் கல்வி பெறவேண்டுமானால் சிங்களவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது (1970). 10 லட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப் பட்டது. தமிழர் வாழும் பூர்வீக இடங்களில் சிங்கள வர்களின் குடியேற்றம் திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டது.

இராணுவத்தில் 100 சதவிகிதம் சிங்களவர்கள்தாம். காவல்துறையில் வெறும் 2 சதவிகிதம்தான் தமிழர் கள். அரசுப் பணிகளிலோ தமிழர்கள் வெறும் 8.3 சதவிகிதம்தான். 1981 ஆம் ஆண்டில் உலகப் புகழ் பெற்ற தலை சிறந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. பழைய ஓலைச் சுவடிகள் உள்பட 97 ஆயிரம் நூல்கள் சாம்பலாக்கப்பட்டன. உலகில் பாசிஸ்டுகள் செய்யும் முதல் காரியம் தமக்கு எதிராக இருப்பவர்களின் அறிவுக் கருவூலங்களை அழிப்பதுதான்! அந்த வேலையைத்தான் சிங்கள அரசும், இராணுவமும் செய்தன.

சிங்களம் மட்டுமேதான் ஆட்சி மொழி என்று சட்டம் செய்ததை எதிர்த்து ஈழத் தந்தை செல்வா தலைமையில் 1956 ஜூன் 5 அன்று பட்டினிப் போராட்டம் கொழும்பு காரிமுகத்திலில் நடத்தப் பட்டது. பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்ட இடத்தில் புகுந்து சிங்களக் காலிகள் தாக்கினார்கள். பக்கத்தில் இருந்த ஆற்றில் தூக்கி எறிந்தனர். ரத்தம் சொட்டச் சொட்ட செல்வா தலைமையில் நாடாளுமன்றத்திற்கே சென்றார்கள்; அங்கு இருந்த பிரதமர்  பண்டாரநாயகா அவர்களைப் பார்த்து கேலியாகச் சிரித்தார். சிங்களவர்கள் கொஞ்சம் முரடர்கள், பேசாமல் கலைந்து செல்லுங்கள்! இனிமேல் இங்கு சிங்களம் தான் ஆட்சி மொழி என்று கூறினார்.

சிங்களவர்கள் மட்டுமே குடியரசுத் தலைவர்

பண்டாரநாயகாவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயகா  புது சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். இனி அதிபர் தேர்தல்  மக்கள் வாக்கு மூலம் நேரடித் தேர்தலாக நடைபெறும்.

இனிமேல் சிங்களவர்களாகவும், மதத்தால் பவுத்தர்களாகவும் இருப்பவர்களும்தான் அதிபர் தேர்தலில்  போட்டியிட முடியும் என்பதுதான் அந்தச்சட்டம். இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்த நிலையில் வேறு வழியின்றி தனி ஈழம்தான் இதற்கு நிரந்தரப் பரிகாரம் என்ற முடிவுக்கு வந்தனர். வட்டுக்கோட்டை மாநாட்டில் தான் தனிஈழம் கொள்கையைப் பிரகடனப் படுத்தினார் தந்தை செல்வா (1976).

தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று இலங்கை நாடாளுமன்றத்திலேயே எடுத்துக் கூறினார் செல்வா. தனி ஒரு மனிதனாக தனி ஈழம் கேட்கிறீர்களே என்று  சிங்கள உறுப்பினர்கள் நையாண்டி செய்தனர்.

அதனை சவாலாக ஏற்று, தனி ஈழம் என்ற பிரச்சினையை முன் வைத்து தேர்தலைச் சந்தித்தனர். 74.2 சதவிகித வாக்குகளைப் பெற்று 18 தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள், தமிழர்கள் நாடாளுமன்றத்திற்குள் கம்பீரமாக நுழைந்தனர்.  அதற்குப் பிறகாவது ஜனநாயகக் கோட்பாட்டை மதித்ததா சிங்கள அரசு? 1983 கொடூரமான படுகொலைக்குப் பிறகு ஈழத் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் போராளி களாக உருவெடுக்கும் ஒரு நிலை பிறந்தது.

இலங்கையில் நடைபெற்ற படுகொலையை இனப் படுகொலை என்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி வெளிப்படையாகவே கூறினார். (16-8-1983). 1984 செப்டம்பர் 23 அன்று வெளிநாட்டில் சுற்றுப் பயணம் செய்த பிரதமர் இந்திரா காந்தி பேட்டி ஒன்றில் கூறினார். இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அங்குள்ள தமிழர்களில் மிதவாதிகள் கூட தீவிரவாதிகளாகும் விபரீதம் ஏற்படும் என்றாரே!

தமிழ்நாட்டில் ஈழப் போராளிகளுக்கு இராணுவப்பயிற்சிகள் தங்கு தடையின்றி நடை பெற்றன-பிரதமராக இந்திரா காந்தி இருந்த அந்த காலகட்டத்தில்! ராஜீவ்காந்தி பிரதமரான நிலையில்தான் தவறான அணுகுமுறைகள் மேற் கொள்ளப்பட்டன. இந்திய இராணுவம் இலங் கைக்குச் சென்றது. ஈழத் தமிழ்ப் பெண்களை வேட்டையாடுவதுதான்-சூறையாடுவதுதான் இந்திய இராணுவத்தினரின் பொழுது போக்காக இருந்தது. உலகில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இராணுவ வீரர்கள் இப்படி நடந்துகொள்வது ஒன்றும் புதிதல்ல என்று சமாதானம் வேறு இந்தியத் தரப்பில் கூறப்பட்டது.

பிரதமர் ராஜீவ் மீது தாக்குதல்

1987 ஜூலை 20 அன்று இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட இந்தியப் பிரதமர் ராஜுவ் காந்தி இலங்கை சென்றார். இலங்கையில் இராணுவ அணிவகுப்பு மரியாதை தரப்பட்டது (30-7-1983). அப்பொழுது இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த சிங்கள வெறியன் விஜித ரோகன விஜயமுனி என்பவன் துப்பாக்கியின் பின் பகுதியால் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கினான்.  அந்த அடி தோள் பட்டையில் விழுந்தது. 23 ஆண்டுகளுக்குப் பின் அவன் கூறினான். மரணத்தைக் கொடுக்கும் தாக்குதலைத்தான் கொடுத்தேன். ஆனால், அவரோ உயிர் தப்பிவிட்டார் என்றான். இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை அவன் விரும்பவில்லையாம். அதனால் தான் அந்தத் தாக்குதலைத் தொடுத்தானாம்.

இலங்கை இராணுவச் சட்டப்படி அவனுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. ஆனால் இரண்டாண்டு முடிவதற்குள் ளேயே இந்தியப் பிரதமரைத் தாக்கிக் கொல்ல முயன்ற அந்தக் கொடியவனை விடுதலை செய்தார் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே (1980).

சிறையில் தான் நன்றாக நடத்தப்பட்டேன் என்றும் அவன் புளகாங்கிதத்துடன் கூறினான் என்றால் இதுபற்றி இந்திய அரசும், இந்திய மக்களும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண் டாமா? இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி சிங்கள மொழியோடு தமிழும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும். ஆனால் கடைசிவரை, அதற்கான சட்டத்தை இயற்றவில்லை-இலங்கை சிங்கள வெறி அரசு! தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளான வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று இந்திய-இலங்கை ஒப்பந்தம் கூறுகிறது. அதனையும் சிங்கள அரசின் ஏற்பாட்டின்படி இலங்கை நீதிமன்றம் மூலம் அது செல்லாது என்று ஆக்கப்பட்டுவிட்டது.

2009 மே மாதத்தில் இலங்கையின் முப்படை களும் ஈழத் தமிழர்களை முற்றாக அழித்து  முடித்தன. கிளிநொச்சி, முல்லைத் தீவுகளில் வாழ்ந்த 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 பேர்களில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 தமிழர்கள் மட்டுமே  இலங்கைப் படையின் கட்டுப்பாட்டுக்குக் கீழே வந்தனர் என்றால்,  மீதி ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் எங்கே போனார்கள்? கடைசிப் போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதெல்லாம்கூட திட்டமிட்டு மறைப்பதற் காகவே சொல்லப்பட்ட புள்ளி விவரம் என்பது தான் உண்மை! 1983 முதல் 2009 ஆம் ஆண்டு இடைவெளியில் 2 லட்சத்து 15 ஆயிரம் ஈழத் தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். 13 லட்சம் தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இவ்வளவு நடந்தும் இந்திய அரசு ஒன்றுமே நடக்காதது போல நடந்து கொண்டது. தமிழ் நாட்டிலிருந்து தமிழர்கள் குரல் கொடுக்கும் போதெல்லாம் , ஆட்சி தரப்பில் பிரச்சினையை எழுப்பியபோதெல்லாம் கடனுக்காக ஏதோ இரண்டு வார்த்தைகளைச் சொல்லுவார்கள். இனிமேல் தமிழர்கள் தாக்கப்பட மாட்டார்கள். இலங்கை அரசு உத்தரவாதம் கொடுத்தது என்று கூறி சமாளிப்பார்கள். உண்மை என்னவென்றால், இலங்கை இராணுவத்தால் போராளிகள் முறியடிக் கப்பட்டதற்கும், அப்பாவித் தமிழர்கள் கொல்லப் பட்டதற்கும் பின்புலமாக, பின்பலமாக இருந்தவை இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகள்தான். இந்தியா இந்த வகையில் உதவி செய்ததற்கு இலங்கை அரசு தரப்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டதே!

மனித உரிமைகளுக்காகவும் தேசிய இன உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய பொதுவுடைமை நாடுகளான சீனாவும், ருசியாவும்,  கியூபாவும்  இப்பிரச்சினையில் நடந்து கொண்ட விதம் வெட்கப்படத்தக்கதாகும். இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை அது என்று சீனா சொல்லுகிறது என்றால் எவ்வளவு பெரிய பொறுப்பற்ற தன்மை. மித்திரபேதம். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரப் பூர்வமான தமிழ் நாளேடான ஜனசக்தியில் (26-5-2009 பக்கம் 8) கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. லண்டன் டெலிகிராப் ஏட்டின் எழுத்தாளர் ரிச்சர்ட் டிக்சன்ஸ் என்பார் எழுதிய கட்டுரையில், (மொழியாக்கம் முனைவர் பா.ஆனந்த்குமார்)

சீனாவின் ஆயுதம், இந்தியாவின் உளவுத் துறையினர், சிங்கள இராணுவ அதிகாரிகள், சிங்கள இன வெறித் தலைவர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து நிகழ்த்திய மிகக் கொடூரமான போர்-பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பிற்குக் காரணமாகிவிட்டது என்று ஜனசக்தி கட்டுரை கூறுகிறதே! இதன் பொருள் என்ன? இந்தியவில் உள்ள இடது சாரிகள் இந்தியாமீது குறை கூறுவது ஒரு புறம் இருக்கட்டும். சீனாவும், ருசியாவும் மிகக் கேவலமாக மனித இனப் படுகொலைக்கு (Genocide)  துணை போயுள்ளனவே - இதுவரை வெளிப் படையாகக் கண்டித்தது உண்டா?

சர்வதேசியம் பேசும் காம்ரேடுகள் உலக அளவிலான கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களுடன் இதுவரை தொடர்பு கொண்டார்களா? அழுத்தங் களைக் கொடுத்ததுண்டா? இன்றைக்குக் கூட ராஜபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற குரல் உலகெங்கும் குமுறி எழுந்துள்ளது - எரிமலையாக வெடித்துள்ளன! ஆனால் கம்யூனிஸ்டு நாடுகள் துரோகம் செய்கின் றனவே! காலந்தாழ்ந்தாவது அய்.நா மன்றம் இதில் கொஞ்சம் அக்கறை காட்ட முனைந்துள்ளது. மூவர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து அறிக்கை கேட்டது. அவர்களும் அறிக்கையை அய்.நா. செயலாளர் பான் -கீ-மூனிடம்  கொடுத்துவிட்டனர்.

நேற்றைய உரையின் தொடர்ச்சி வருமாறு:

இலங்கை அரசின் அமைச்சரவையில் வீட்ட மைப்பு பொறியியல் சேவைகள் மற்றும் நிருமாண பொது வசதிகள் துறை அமைச்சராக இருப்பவர் ஜனதா விமுக்திப் பெரமுனாவின் (ஜெ.வி.பி.) தலைவரான விமல் வீரலவங்க; இலங்கையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் இந்தப் பெயர். மார்க்சியம் உதட்டால் பேசி,  உள்ளத்தால் பாசிசம் பேசும் வன்குணாளர்கள் இவர்கள். (இந்த அமைப்பினைச் சேர்ந்தவர்கள்தான் இந்தியாவில் நடைபெறும் மார்க்சிஸ் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடுகளுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்படுகிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

இவர் இலங்கையில் அமைச்சராகவும் இருக்கக் கூடியவர்.  இனப்படுகொலையை விசாரிக்க அய்.நா. மூன்று பேர்களைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை நியமித்தது அல்லவா? அதனைக் கடுமையாக விமர்சனம் செய்தவர் - பட்டினிப் போராட்டம் நடத்தியவரும் கூட. உச்சக் கட்டமாக அய்.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூனின் கொடும் பாவியை எரித்தவர்.

முதல் அமைச்சர்-ஏன் கண்டிக்கவில்லை?

அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழ்நாடு சட்டப் பேரவையில் 8-6-2011 அன்று ஈழத் தமிழர் தொடர்பான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

இனப்படுகொலை செய்த சிங்கள அரசு - அதன் அதிபர் மகிந்த ராஜபக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக இலங்கை அரசு மீது இந்திய அரசு பொருளாதார தடையைக் கொண்டு வரவேண்டும்.

எதிர்க்கட்சிகள் உட்பட இந்தத் தீர்மானத் திற்கு ஆதரவு அளித்தன.  தி.மு.க. ஆதரவு தெரிவித்த நிலையிலும் இப்பிரச்சினையில் தமிழ்நாடு சுருதிப் பேதமின்றி இருக்கிறது என்று உணர்த்துவதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பை அ.தி.மு.க. அரசு கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டது. தீர்மானத்தை வழிமொழியும் நிலையில் முதல் அமைச்சர் தி.மு.க.வையும், கலைஞர் அவர்களையும் வசை பாட இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தியது முதல் அமைச்சரின் முதிர்ச்சியின்மைக்கான அடையாளம். தேவையில் லாமல் விடுதலைப் புலிகள் மீதும் சேற்றை வாரி இறைத்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதற்குத் தாமே காரணம் என்று பெருமையடித்துக் கொண்டார்.

அதிகார பூர்வமான  எதிர்க் கட்சித் தலைவரான தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந் தும் தம் பங்குக்கு முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களைத் தரக் குறைவாகச் சாடி, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நோக்கத்தையே சிதைத்தார்.

இதற்குப் பிறகு இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து உரையா டினார்.

சிவசங்கரமேனன் தலைமையில் வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமாராவ், இந்திய பாதுகாப்புத் துறை செயலாளர் பிரதீப் குமார் அடங்கிய குழு இலங்கை சென்று அதிபர் ராஜபக்சேயுடனும், சம்பந்தப்பட்டவர்களு டனும் பேசினார்கள்.

இலங்கை செல்லும் முன் தமிழக முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியுள்ளார்கள். தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் குறித்து இலங்கை அதிபரிடம் பேசி இருப்பார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்து இருப்பார்கள். அதுதான் நடக்க வில்லை.

இந்தியா புறப்படுமுன் ராஜபக்சேவை சந்தித்த பின் கொழும்பில் சிவசங்கரமேனன்  செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில் என்ன கூறினார்?

தமிழ்நாடு முதல் அமைச்சர் தெரிவித்த கருத்துகள் குறித்து இலங்கை அதிபரிடம் பேசவில்லை என்று கூறி கை விரித்து விட்டாரே!

இதென்ன கொடுமை! எதற்காக சிவசங்கர மேனன் இலங்கை செல்லும் முன் தமிழ்நாட்டு முதல் அமைச்சரைச் சந்தித்துப் பேசினார்? முதல் அமைச்சரை சந்தித்து விட்டு, இலங்கை அதிபரை சந்திக்கச் சென்ற இடத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தமிழக முதல் அமைச்சரை கலந்தா லோசித்த கருத்துகள் குறித்தும் பேசவேண்டிய இடத்தில் பேசவில்லை என்றால், தமிழ்நாடு சட்டப் பேரவையின் தீர்மானத்துக்குத்தான் என்ன மரியாதை? முதல் அமைச்சருடனான சந்திப் புக்குத்தான் என்ன மரியாதை?

இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் வெளிப்படையாகவே சொல்கிறார். நாங்கள் டில்லியுடன்தான் பேசுவோம் - தமிழ்நாட்டு முதல் அமைச்சருடன் அல்ல என்று நீட்டி முழங்கினாரே!
தமிழ்நாடு முதல் அமைச்சர் என்ன செய்திருக்க வேண்டும்?

சிவசங்கர மேனன் தலைமையில் சென்ற மூவர் குழுவினர் இப்படி நடந்து கொண்டதற்காக முதல் அமைச்சர் தம் கருத்தைக் கூறி இருக்க வேண்டாமா? கண்டித்திருக்க வேண்டாமா?

இது குறித்துத் தமிழ்த் தேசியம் பேசும் தோழர்களும் ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்?

கபட நாடகம் அல்லவா நடக்கிறது!
 

இந்தியா - இலங்கை ஒப்பந்தம் ராஜீவ்காந்தி இந்தியப் பிரதமராகவும், ஜெயவர்த்தனே இலங்கை அதிபராகவும் இருந்த கால கட்டத்தில் மேற் கொள்ளப்பட்டது. அதில்தான் மாநிலங்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதற்குப் பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் என்றும் கூறப்பட்டது.

அது பற்றியெல்லாம் இனி பேசிப் பயனில்லை; மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த போர் வெற்றியை சீர்குலைப்பதற்கு யாருக்கும் இடம் அளிக்க முடியாது என்று கூறுகிறார் என்றால் இவர்கள் மத்தியில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு எங்கிருந்து கிடைக்கப்போகிறது? ராஜபக்சே போர்க்குற்றவாளிதான் என்று அறிவிக்கப்படுவதற்கான அவ்வளவு ஆதாரங் களையும், ஆவணங்களையும் அளித்துள்ளனர் வல்லுநர் குழுவினர்.

இப்பொழுது எங்கே முட்டுக்கட்டை? ராஜ பக்சே உலக நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ள அய்.நா.வின் பாது காப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதி தேவைப் படுகிறது. அதன் உறுப்பினர்களான சீனாவும் ருசியாவும் வீட்டோ பவரைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்க தோள் தூக்கி நிற்கின்றனரே - இந்தியாவும் துணை போகிறதே!
இந்த முட்டுக்கட்டையை அகற்றாமல் ராஜ பக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது எப்படி? போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்படு வதன் சாத்தியம் என்ன? இந்தப் பிரச்சினை உலகப் பிரச்சனையாக மாற்றப்பட வேண்டிய அவசியத் துக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.!

அய்ரோப்பிய ஒன்றிய பதினேழு நாடுகள் இலங்கையின் போர்க்குற்றங்களை முன்னிறுத்தி இலங்கை அதிபர் ராஜபக்சே மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்; போரினால் பாதிக்கப் பட்டு வதைபடும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரி மைக்கான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானத்தின் அடிநாதம்! (26-5-2009)

இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிப்பதில் முண்டா தட்டி முந்திரிக் கொட்டையாக நடந்து கொண்டது இந்திய அரசின் பிரதிநிதிதானே! இந்தியாவின் பிரதிநிதி கோபிநாத் அச்சங் குளங்கரே என்பவர் என்ன பேசினார்?

இந்தக் கூட்டமே அவசியமற்றது. உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பைப் போரில் தோற்கடித்ததற்காக இலங்கை அரசைப் பாராட்ட வேண்டுமே தவிர, அதனைத் தண்டிக்க, கண்டிக்க முயற்சிக்கக் கூடாது என்று பேசினாரே! இதே இந்திய அரசு தமிழர்களின் பிரச்சினை யான இதில் இப்படி நடந்து கொண்டுள்ளதே - மற்ற இனப் பிரச்சினைகளில் எப்படி நடந்து கொண்டு இருக்கிறது?

ஆப்பிரிக்காவில் உகண்டா நாட்டில் வணிகம் செய்யச் சென்ற குஜராத்தியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்த அடுத்த கணமே இந்திய அரசு துடிதுடித்ததே! பிரான்சு நாட்டின் தலைநகரில் வாழும் சீக்கியர்கள் உட்பட அனைவரும் தலைக்க வசம் (ழநடஅநவ)  அணிய வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தபோது பிரான்சு அதிபரை நேரில் சந்தித்தாரே பிரதமர் மன்மோகன்சிங்!

ஏன் இந்த ஓர வஞ்சனை?

வியன்னாவில் சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிக் சூட்டில் ஒருவர் பலியானார். 30 பேர்கள் காயமடைந்தனர். அதன் எதிரொலியாக இந்தியாவில் பஞ்சாப் பற்றி எரிந்தது. ஜலந்தர்-சண்டிகர்- லூதியானா போன்ற நகரங்கள் பதற்றம் அடைந்தன. பிரதமர் மன்மோகன்சிங் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தாரே!

புதிதாக அயல்துறைஅமைச்சராகப் பொறுப் பேற்ற எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாக ஆஸ்திரியாவில் இருக்கும் இந்தியத் தூதரகத்தோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கு மாறு வற்புறுத்தவில்லையா? ஒரு உயிர் பறி போனதற்கே இப்படி துடி துடிக்கும் இந்தியஅரசு பல லட்சக் கணக்கான தமிழர்களை பலி கொடுத்துப் பரித விக்கும் மக்கள் பக்கம் பார்வையைச் செலுத்தாதது-ஏன்?

லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டது. பன்னிரண்டாயிரம் இந்தியர்கள் அங்கு வாழ் கிறார்கள் என்றவுடன் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடவில்லையா? உடனடியாக ஆறு போர்க் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டனவே! அப்படி வந்து சேர்ந்த கேரள மக்களை இந்தியாவின் பல்வேறு விமான நிலையங் களில் இருந்து விமானம் மூலம் அனுப்பினரே! போர்க்கால வேகத்தில் பணிகள் முடுக்கப் பட்டனவே! (21.7.2006) ஏன் இந்த ஓரவஞ்சனை - மாற்றாந்தாய் மனப்பான்மை? இந்திய அரசுக்கு என்ற வினாவைத் தமிழர்கள் எழுப்பமாட்டார் களா?

மலையாளிகள் ஆதிக்கம்

ஈழத் தமிழர் பிரச்சினையில் விதிவிலக்கு இல்லாமல்  அனேகமாக எல்லாப் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் தமிழர்களுக்கு எதிராகவே விஷம் கக்குகின்றனர். இது ஒரு பக்கம் என்றால் மலையாள அதிகார வர்க்கம்-தமிழர்களுக்கு எதிராகவே நடந்து கொள்வது என்ற முடிவோடு இருப்பதாகத் தெரிகிறது.

இந்தியப் பிரதமருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் எம்.கே.நாராயணன். (இப்பொழுது மேற்கு வங்காள ஆளுநர்) ஒரு மலையாளி! வெளியுறவுத் துறை ஆலோசகராக இருந்தவர் சிவசங்கர மேனன் (இப்பொழுது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) ஒரு மலையாளி!

அய்.நா. மன்றத்தின் செயலாளர் பான்-கி-மூன் அவர்களுக்குச் செயலாளராக இருக்கும் விஜய் நம்பியார் ஒரு மலையாளி! இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சதீஷ் நம்பியார் ஒரு மலையாளி! (ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி). அய்.நா.வின் செயலாளராக இருக்கும் விஜய் நம்பியாரும் இலங்கை அதிபரின் பாதுகாப்பு ஆலோசகர் சதீஷ் நம்பியாரும் அண்ணன் தம்பிகள் ஆவர். உலகப் புகழ் பெற்ற டைம்ஸ் ஏட்டின் எழுத்தாளர் கேத்தரின் பிலிப் எழுதுகிறார்:

பான்-கீ-மூனின் தலைமை ஆலோசகர் விஜய் நம்பியார், கொழும்பிலிருந்த அய்.நா. அலுவலக  ஊழியர்களுக்கு எழுதுகிறார். படுகொலை செய்யப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக் கையை அய்.நா.வுக்குத் தெரிவிக்க வேண்டாம். இதனால் இலங்கை அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்று உத்தரவிடுகிறார்.

அய்.நா.மீது படிந்துள்ள இந்தக் கறையைத் துடைக்கவே முடியாது என்று டைம்ஸ் ஏட்டில் எழுதியுள்ளார் கேத்தரின் பிலிப். மத்திய அரசின் துறைச் செயலாளர்கள் மொத்தம் 53 பேர் என்றால் 19 பேர்கள் மலையாளிகள். இவ்வளவுக்கும் கேரளா சின்னஞ்சிறு மாநிலமாகும்.
சிங்களவர்கள் தமிழர்களை எதிரிகளாக நினைப்பது போல, நடந்துகொள்வதுபோல, இந்தியாவில் பார்ப்பனர்களும், மலையாளிகளும் தமிழர்களை எதிரிகளாகவே காண்கின்றனர். ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தச் சிக்கலும் மிகக் கொடுமையானதாகும்!

லண்டன் தொலைக்காட்சியில்...

லண்டன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப் பட்ட உண்மை நிகழ்வுகள் உலகம் முழுவதும் உள்ள மக்களைத் துடித்து எழச் செய்திருக்கிறது.

அமெரிக்க, இங்கிலாந்து நாடுகள்கூட ராஜபக் சேவைக் குற்றக் கூண்டில் நிறுத்த ஆதரவுக் கரங்களை நீட்ட ஆரம்பித்துள்ளன. கம்யூனிசம் பேசம் சீனா, ருசியா, கியூபா, சோசலிசம் பேசும் இந்தியா எல்லாம் சேர்ந்து கொண்டு இனப் படுகொலைக்குத் துணை போன கொடுமைக்கு மன்னிப்பு எந்த நூற்றாண் டிலும் கிடைக்கப்போவதில்லை.

அய்.நா. மன்றத்தின் குற்றச் சாற்றுக்கு இலக்காகி போர்க் குற்றவாளியாக இதற்கு முன் அறிவிக்கப் பட்டவர்கள் பலர் உண்டு. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1946 மே 3ஆம் நாள் டோக்கியோ போர்க்குற்ற நீதிமன்றம் ஜப்பானிய தலைவர்கள் மீது விசாரணை நடத்தியது. மூன்று விதமான குற்றங்கள் குறித்து விசாரிக்கப் பட்டது. இரண்டாம் உலகப் போரில் இழைக்கப் பட்ட அமைதிக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

டோக்கியோ நீதிமன்றத்தில் ஜப்பானிய பிரதமர் களாக இருந்த ஜெனரல் டோஜோ, ஜெனரல் கொய்சோ, ஜப்பானிய  இராணுவ தளபதியான யோஷிஜிரோ உமேசு, போர் அமைச்சராக இருந்த செய்ஷிரோ ஹிட்ட ஹாக்கி உட்பட பலருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

அதே போல நூரம்பர்க் விசாரணை மன்றத்தில் ஜெர்மனியப் படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த ஹெர்மன் கோயரிங், எஸ்.எஸ்.படையின் உயர் தளபதியாக இருந்த எர்னஸ்ட் கால்ட்டென புரூனர் அடால்ப் ஈச்மென் ஆகியோர் உள்பட நாஜி உயர்தலைவர்கள் பலரும் தண்டிக்கப் பட்டனர். யூகோஸ்லோவேகியா குடியரசுத் தலைவராக இருந்த மிலோ சேவிக் போர்க் குற்றங்கள் புரிந்ததான சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் வேளையில் சிறையிலே மரணமடைந்தார்.

போஸ்னியா முன்னாள் குடியரசுத் தலைவர் கராட்ஜிக் என்பவர் போர்க் குற்றங்களுக்காக 2008 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி கைது செய்யப் பட்டு, பெல்கிரேடு போர்க் குற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு தற்போது சர்வதேச நீதிமன்றத்தின் பாதுகாப்பில் ஹேக் நகரில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது தொடர் விசாரணை ஒரு பக்கத்தில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

இவர்களை எல்லாம் விட மிகப் பெரிய குரூரமான போர்க் குற்றவாளியான மகிந்த ராஜபக்சே குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டனை விதிக்கப்படாவிட்டால், உலகில் கொடுமைக்கும், கொலை வெறிக்கும் தங்கு தடையின்றி முழு உரிமம் அளிக்கப்பட்டதாகவே, சிகப்புக் கம்பளம் விரிக்கப் பட்டதாகவே பொருள் படும்!

அய்.நா.அதிகாரிகளையே தடை செய்த இலங்கை

இலங்கை முகாம்களில் முடங்கிக் கிடந்த, அடைத்து வைக்கப்பட்ட தமிழர்களை அய்.நா. அதிகாரிகள் நேரில் பார்வையிடச் சென்ற போது இலங்கை அரசு அதனைத் தடை செய்ததே! இதனை யுனிசெஃப் மேலாண்மை இயக்குநர் வெனிமென் அறிக்கை மூலம் வெளிப்படுத்திக் கண்டித் துள்ளாரே!

பத்திரிகையாளர்கள் படுகொலை

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட பகுதி களுக்குச் செல்ல சர்வதேச பத்திரிகைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதே. 2001 முதல் 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் ஒன்பது பத்திரிகையா ளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 27 பேர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழின இளை ஞர்கள் அடைத்து வைக்கப்பட்ட முகாம்களிலி ருந்து பிரித்தெடுக்கப் பட்டு மிகக் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாயினர். அய்.நா.வின் இலங் கைத் தூதர் பாலித்த கோ கொன்னா ஒப்புக் கொண்டு கூறினார்.
அடையாளம் கண்டு அழிப்பார்களாம்!

தனி  முகாம்களில் 13 ஆயிரம் பேர்கள் இருக்கி றார்கள். மேலும் மற்ற முகாம்களில் 10 ஆயிரம் புலிகள் மறைந்திருக்கக்கூடும். ஆனால் இவர்கள் எல்லோரையும் அடையாளம் கண்டு அழிப்பது தான் எங்கள் நோக்கம் என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டவர்களைக் குற்றக் கூண்டில் ஏற்றா விட்டால் 21 ஆம் நூற்றாண்டு என்பது மிகப் பெரிய அவமானத்துக்குரிய, கறைபடிந்த காலமாகவே கருதப்படும்.
1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு 24 தேசிய இனங்கள் தனி நாடுகளாக மலர்ந்துள்ளன. அதில் 25 ஆவது நாடாக தமிழ் ஈழம் பிரிந்தாகவேண்டும்.
வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கிழக்கு தைமூர், செக் குடியரசில் சுலோவேகியா, தெற்கு சூடான் தனி நாடாகவில்லையா?

இலங்கை அரசையும் அய்.நா. ஏன் இந்த வகையில் வற்புறுத்தக்கூடாது?

திராவிடர் கழகம் கடைசிவரை ஈழத் தமிழர் களுக்காகக் குரல் கொடுக்கும், கர்மத்துக்கு உரியவர்கள் நாங்கள்-கடைசிவரை துணை நிற்போம் என்று கூறினார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.