இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கடந்தகாலத்தில் நடந்த கொடுமைகள் எதனையும் நாங்கள் மறக்கவில்லை. இந்த உருத்திரபுரம் மண்ணில் விமானக்குண்டு வீச்சுக்களிலும், எறிகணை வீச்சுக்களிலும் கொல்லப்பட்டுக் கிடந்த எம் சொந்தங்கள் கண்ணில் வந்து போகிறார்கள்.
நிலைமை இவ்வாறிருக்க நாங்கள் எல்லாவற்றையும் மறந்தவர்களாக இருப்போம் என்ற எண்ணப்பாட்டுடன் 25 அமைச்சர்கள் 320கோடியுடன் வந்திருக்கின்றார்கள், அத்தனை அவசியம் என்ன? இந்த சின்னப் பிரதேச சபையை கைப்பற்றுவதற்கு இத்தனை அவசியம் என்ன? என்பதை மக்கள் புரிந்து கொண்டாகவேண்டும். எனக் கேள்வியெழுப்பினார்.
அதுபோதாதென்று மணல் அள்ளி விற்றவர்களும், சாராயக்கடை வைத்தவர்களும் நீண்ட வாகன ஊர்திகளில் சுற்றிவருகிறார்கள், அவர்களோடு சில எடுபிடிகளும் கூட சுற்றித்திரிகின்றார்கள். இவர்கள்தான் கடந்தகாலத்தில் புலிகளின் பின்னால் திரிந்து அவர்களுடைய பணத்தில் சாப்பிட்டு, அவர்களுடைய பணத்தில் வீடுகளைக் கட்டியவர்கள்.
இப்போது ஈ.பி.டி.பி அதுவும் போனால் அடுத்து வரும் ஒரு அமைப்போடு சேர்ந்து கொண்டு வயிறு நிரப்புவார்கள். உன்மையில் இதற்காக இவர்கள் வெட்கப்படவேண்டும். இந்த எடுபிடிகளின் வார்த்தைகளில் வலுவில்லை அவர்களுடைய கோரிக்கைகள் எப்போதும் நிறைவேற்றப்படப்போவதில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டாகவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து உரையாற்றிய ஆனந்தசங்கரி நானும் இந்தப்பிரதேசம் சார்ந்தவன் என்ற வகையில் இங்கு நடந்த அத்தனை விடயங்களும் எமக்குத் தெரியும். இன்று எங்கள் தெருக்களில் வீதியுலாப்போவபவர்கள் அரசியலுக்குத் தகுதியற்றவர்கள் சாராயக்கடை வேண்டுமென்றால் வைக்கலாம் எனக்கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட அமைப்பாளர் வேளமாலிகிதன். கூட்டமைப்பு மக்களுக்கு எதைக்கொடுத்திருக்கின்றது? என்று கேட்கிறார்கள். நாம் கூறுகின்றோம். மக்களுக்காக மக்களுடைய உரிமைக்காக பேசியமைக்காக யோசப்பரராசசிங்கம், ரவிராஜ் போன்று இன்னும் சிலரை கொடுத்திருக்கின்றோம்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மக்களுடைய நிலைமைகள் தொடர்பில் பேசியமைக்காக அண்மையில் நொச்சியாகமவில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எனவே மக்களுக்காக நாம் உயிரைக் கொடுத்திருக்கின்றோம்.
தொடர்ந்து கொடுப்பதற்க்கு நாம் தயாராகவும் உள்ளோம். வெறும் வாட்டர்பம்புகளையும், கிறவல் வீதிகளையுமல்ல என முழங்கினார். கூட்டத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி வெளியிட்டு வைத்தார்.