கூட்டமைப்பினர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முனை யும் போது, அந்தப் பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களில் இராணுவத்தினரும், பொலிஸாரும் வீடுகளுக்குச் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால், மக்கள் அச்சத்தில் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. இவ்வாறு இடம்பெறுவதை திட்டமிட்ட சதி என்றே கூறலாம்.
வடக்கில் அரச தரப்பு தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது. கிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையின்போது அதிகளவான அரச சொத்துகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் பாவித்துள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவையாகும்.அரசு வடக்கில் சுதந்திரமாகத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது போன்று ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் வழிசமைத்துக் கொடுக்கவேண்டும்.
வடக்கில் இன்னும் அரசியல் சுதந்திரம் நிலைநாட்டப்படவில்லை. அதனை நிலைநாட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு வாக்களர்களுக்கு இதுவரை ஏற்றுக்கொள்ளக் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு வாக்களர்களுக்கு இதுவரை ஏற்றுக்கொள்ளக் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை என கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பெரும்பாலான வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் வட பகுதி வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை தயாரிக்க கபே அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. முதலாவது தினத்தில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
எவருக்கேனும் தேசிய அடையாள அட்டை இல்லை என்றால் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொடுத்து, வடபகுதியில் 30 வருடங்களுக்கு பின்னர் நடைபெறும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாத்து கொள்ளுமாறு கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை பல்வேறு வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்தி முடக்குவதற்கு அரச தரப்பு முயன்று வருகிறது எனவும் இந்த நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரை மறைமுகமாக ஈடுபடுத்தியும் வருகின்றது எனவும் நீதியானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) குற்றம்சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் , தெற்கிலும், அரசியல் அச்சுறுத்தல்கள், வன்முறைச்சம்பவங்கள் இடம் பெறுகின்றன. ஆனால், அவை ஒரே கட்சிக்கு எதிராகத் தொடர்ந்தும் இடம்பெறுவதில்லை. ஆனால், வடக்கில் அவ்வாறு இல்லை. கூட்டமைப்புக்கு எதிராகத் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள், வன்முறைகள் என்பன திட்டமிட்டபடி கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
கூட்டமைப்பினர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முனை யும் போது, அந்தப் பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களில் இராணுவத்தினரும், பொலிஸாரும் வீடுகளுக்குச் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால், மக்கள் அச்சத்தில் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. இவ்வாறு இடம்பெறுவதை திட்டமிட்ட சதி என்றே கூறலாம்.
வடக்கில் அரச தரப்பு தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது. கிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையின்போது அதிகளவான அரச சொத்துகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் பாவித்துள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவையாகும்.அரசு வடக்கில் சுதந்திரமாகத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது போன்று ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் வழிசமைத்துக் கொடுக்கவேண்டும்.
வடக்கில் இன்னும் அரசியல் சுதந்திரம் நிலைநாட்டப்படவில்லை. அதனை நிலைநாட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு வாக்களர்களுக்கு இதுவரை ஏற்றுக்கொள்ளக் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு வாக்களர்களுக்கு இதுவரை ஏற்றுக்கொள்ளக் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை என கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பெரும்பாலான வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் வட பகுதி வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை தயாரிக்க கபே அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. முதலாவது தினத்தில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
எவருக்கேனும் தேசிய அடையாள அட்டை இல்லை என்றால் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொடுத்து, வடபகுதியில் 30 வருடங்களுக்கு பின்னர் நடைபெறும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாத்து கொள்ளுமாறு கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.