குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

யெனீவா எச். எசு. பி.சி வங்கிக் கிளைகளில் திடீர் சோதனை!

18.02.2015-யெனீவா நகரில் உள்ள எச். எசு. பி.சி  வங்கிக் கிளைகளில்  அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்ட னர். வாடிக்கையாளர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல் மோசடி செய்து ஏமாற்ற வங்கி நிர்வாகம் உதவியதாக கிடைத்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அங்குள்ள வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் கரறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் எனக் சுறப்படுகிறது. இதனால் இந்தியாவிலும் இந்த திடீர் சோதனை இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்டது SBC இதன் யெனீவா கிளைகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கரறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர். இந்தியர்களின் கரறுப்புப் பணமும் பெருமளவில் இங்கு வைப்பிலிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட ஜெனீவாவின் அரசாங்க  வழக்கறிஞர், பண மோசடி தொடர்பாக குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே சோதனை நடத்தப்பட்டது. வங்கிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தாலும் கூட பல்வேறு தனி நபர்களும் கூட விசாரிக்கப்படுவார்கள். SBC வங்கியின் சுவிட்சர்லாந்து தலைமையகத்திலும், சில கிளைகளிலும் சோதனை நடத்தப்பட்டது என தெரிவித்தார்.

இந்த வங்கியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நாடுகளின் வாடிக்கையாளர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தாமல் மோசடி செய்வதற்கு வங்கி நிர்வாகமே உதவியதாக சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.

இதன் மூலம் சுவிஸ் அரசுக்கு 119 பில்லியன் டொலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வங்கி மீது வழக்குத் தொடரப்பட்டது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.