அங்குள்ள வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் கரறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் எனக் சுறப்படுகிறது. இதனால் இந்தியாவிலும் இந்த திடீர் சோதனை இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்டது SBC இதன் யெனீவா கிளைகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கரறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர். இந்தியர்களின் கரறுப்புப் பணமும் பெருமளவில் இங்கு வைப்பிலிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட ஜெனீவாவின் அரசாங்க வழக்கறிஞர், பண மோசடி தொடர்பாக குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே சோதனை நடத்தப்பட்டது. வங்கிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தாலும் கூட பல்வேறு தனி நபர்களும் கூட விசாரிக்கப்படுவார்கள். SBC வங்கியின் சுவிட்சர்லாந்து தலைமையகத்திலும், சில கிளைகளிலும் சோதனை நடத்தப்பட்டது என தெரிவித்தார்.
இந்த வங்கியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நாடுகளின் வாடிக்கையாளர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தாமல் மோசடி செய்வதற்கு வங்கி நிர்வாகமே உதவியதாக சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
இதன் மூலம் சுவிஸ் அரசுக்கு 119 பில்லியன் டொலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வங்கி மீது வழக்குத் தொடரப்பட்டது.